மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்புக்கள் ஏற்படுவது வருத்தப்பட வேண்டிய விஷயம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். புதியதலைமுறை செய்தியாளராக பணியாற்றிய முத்துகிருஷ்ணன் என்ற இளைஞர் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். இவரது மரியாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், மழைநீர் வடிகால் விபத்து குறித்து, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் கூறுகையில், மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்புக்கள் ஏற்படுவது வருத்தப்பட வேண்டிய […]
கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து புதுப்புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை நேரத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் வகையில் நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே இது வெளிக்காட்டுகிறது. சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதும், மக்களிடம் உள்ள பயத்தை தணிப்பதுமே காவல்துறையின் முக்கியமான பணியாக இருக்கவேண்டும். இனி, தமிழ்நாட்டின் […]
சென்னையில் 156 நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசல். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் சென்னையில் 156 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அந்தவகையில் சென்னையில் இன்று பெட்ரோல் 1லிட்டர், ரூ.102.63க்கும்,டீசல் 1லிட்டர் ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோவையில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து பலியானவரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. கோவை உக்கடம் அருகே, ஈஸ்வரன் கோயில் அருகே கார் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து பலியானவரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. விசாரணையில் பலியானவர் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2019-ல் தேசிய பாதுகாப்பு முகமை […]
“இருள் என்னும் அறியாமையுடன் போராட வேண்டாம்; தெளிவு என்னும் ஒளியை ஏற்றினால் அறியாமை இருள் தானாக மறைந்துவிடும்” என தீபாவளி வாழ்த்து செய்தியில் சத்குரு தெரிவித்துள்ளார். பாரத கலாச்சாரத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். கலாச்சார ரீதியாக தீபாவளி தினமானது நரகாசூரனை கிருஷ்ணர் வதம் செய்த தினமாகவும், வனவாசம் முடித்து அயோத்தியாவிற்கு திரும்பிய ராமரை மக்கள் தீபங்களுடன் வரவேற்ற […]
ராக்கெட் வெடி தீப்பொறியால் பற்றி எறிந்த ஹார்டுவேர் கடை. இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், மக்கள் அனைவரும் வெடி வெடித்து மிகவும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், தீபவளியை மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டாடுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில், சென்னை கீழ்கட்டளையில் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ராக்கெட் வெடி வெடித்த போது அதிலிருந்து தீப்பொறி பட்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பைப்புகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டியிருந்த, நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ இவ்வாண்டு தீபாவளி பண்டிகை 24.10.2022 அன்று கொண்டாடும் பொருட்டு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக 25.10.2022 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் […]
திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் தீ விபத்து. திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியில் நகைகடன் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், ஆவணங்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து தீக்கிரையானது. தீ விபத்து குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வானில் செயற்கைகோளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக சரி செய்து கொள்ள ஏவுகணை அனுப்ப பட வேண்டும். அதற்கு சரியான இடம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் – மயில்சாமி அண்ணாதுரை பேச்சு. நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, குலசேகரத்தில் அமைக்கப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளத்தை பற்றி குறிப்பிட்டு பேசினார். தூத்துகுக்டி மாவட்டம் உடன்குடி அருகே, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேசுகையில், ‘ […]
குருபூஜை தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு. இந்திய விடுதலை போராட்டத்தில், ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டதில், மருது சகோதரர்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். இவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியில் நினைவாலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 27-ஆம் தேதி குருபூஜை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.செந்தில்குமார் காளையார்கோவிலில் நடக்கும் குருபூஜை தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி […]
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய கடற்படைக்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,’தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல் படுகாயம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஏற்கனவே இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், தற்போது நமது கடற்படையே (இந்திய கடற்படை) நமது மீனவர்கள் மீது தாக்குதல் […]
பல தமிழ்வழி கல்வி பள்ளிக்கூடங்கள் தற்போது மூடப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழுக்கு சமாதி கட்டிவிடுவார்கள்.’ என ஹிந்தி திணிப்பு தீர்மானம் குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இந்த வாரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டனர். இதுகுறித்து பேசிய அண்ணாமலை, ‘ இந்திய அளவில் அதிகம் பொறியாளர்களை உருவாக்கும் மாநிலமான தமிழகத்தில் தமிழ் […]
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். அந்தமான் அருகே வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வந்த நிலையில், தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. மேலும் இது வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் பின்னர் அது வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்றும் வானிலை […]
தமிழ்நாடு முதலமைச்சரைத் தலைமையாகக் கொண்டு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு. தமிழ்நாடு முதலமைச்சரைத் தலைமையாகக் கொண்டு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தமிழ்நாடு கால நிலை மாற்ற இயக்கத்திற்கு உரிய வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் குழு […]
ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி, காணொளி வாயிலாக சென்னையில் 5ஜி சேவையை துவங்கி வைத்துள்ளார். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் பிரதான முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் ஏர்டல் நிறுவனம் மட்டுமே 5ஜி சேவையை சென்னையில் வழங்கி வருகிறது. தற்போது அதேபோல ,சென்னையில் தனது 5ஜி சேவையை இன்று ஆரம்பித்துள்ளது ஜியோ நிறுவனம். இன்று ராஜஸ்தானில் 5ஜி சேவையை ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார். […]
தமிழக மக்களின் வரி பணத்தில் செயல்படும் அரசு மருத்துவமனையில், மக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 565 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு மருத்துவ பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மக்களின் வரி பணத்தில் செயல்படும் அரசு […]
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீபாவளியான நாளை மறுநாள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு […]
பயிற்று மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆணையை பிறப்பித்துள்ளதா திமுக? என அண்ணாமலை கேள்வி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு யார் காரணம் என ஆணைய அறிக்கையில் தெளிவாக இல்லை அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை பாஜக ஏற்காது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தூண்டிவிட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் அதிக பொறியாளர்களை உருவாக்கும் தமிழகத்தில் தமிழில் […]
சட்டமன்றத்தில் ஜெயலலிதா மரணம் குறித்த ஆணைய அறிக்கையை தாக்கல் செய்யும் போது அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த ஆணையம் அளித்த தரவுகளின் அடிப்படையில் சம்பந்தபட்டவர்கள் மீது கிருமினல் வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். என அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதன் உண்மை தன்மை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பல்வேறு […]
இம்முறை எதிர்பார்ததற்கு முன்பாகவே மழை பெய்து வருகிறது என அமைச்சர் மூர்த்தி பேட்டி. மதுரை திருப்பாலை அருகே நிரம்பி உடையும் நிலையில் உள்ள நாராயணபுரம் கம்மாயை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இம்முறை எதிர்பார்ததற்கு முன்பாகவே மழை பெய்து வருகிறது; தண்ணீர் தேங்கும் பகுதிகள், ஆக்கிரமிப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத விதமாக ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.