மழைநீர் வடிகால் பணிகளால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள், அடையாளப் பலகைகள் வைக்க தலைமை செயலாளர் உத்தரவு. பருவமழையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள், அடையாளப் பலகைகள் வைக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பருவமழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால் பணிகள் […]
புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடப்பவர்களால் நாளுக்குநாள், பல விபத்துக்கள் நேரிட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதமும், […]
கோவை கார் வெடி விபத்து சம்பவத்தில் கைதான 5 பேரும் கோவை மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கோவையில் கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சோதனையில், கார் விபத்து ஏற்பட்ட இடத்திலும், ஜமேசா முபின் வீட்டிலும் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட சோதனையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில், ஜமேசா முபினுடன் இருந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது […]
தீபாவளி பண்டிகைக்கு பின் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு கடந்த சனிக்கிழமை முதல் நேற்று வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவுள்ளது.
இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து. இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ரிஷி சுனக், நேற்று மன்னர் மூன்றாம் சார்லஸ்-ஐ சந்தித்த பின்பு பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள். இதன் மூலம் இந்தியா – இங்கிலாந்தின் உறவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார். […]
வாடகை தாய் விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நட்சத்திர தம்பதிகளாக நடிகை நயன்தரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 4 மாதங்களில் சரியாக அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். திருமணம் ஆன 4 மாதங்களில் குழந்தை பெற்ற விவகாரம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. […]
தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரங்கள் இவற்றுடன் பட்டாசுகளும் தவிர்க்க முடியாதது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவரவர் வயதுக்கேற்ற பட்டாசுகளை வெடித்து மகிழ்வர். பட்டாசுகள் மகிழ்வைத் தரும் அதே வேளையில் , அவற்றினால் ஏற்படும் ஒளி,காற்று மாசுபாடுகளும், குப்பைகளும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தலைநகர் டெல்லியில் ஏற்கனவே காற்றுமாசு அதிகிரித்துள்ள நிலையில்,பட்டாசு வெடிக்க தடைவிதிக்கபட்டது.தமிழகத்தில் பசுமை பட்டாசுகளை வெடிக்கவும், பட்டாசுகளை வெடிக்க நேர கட்டுப்பாடுகளை வெளியிட்டும் அரசு அறிவுறுத்தியது. பல இடங்களில் நேரக்கட்டுபாடுகள் மீறப்பட்டது.சென்னையில் நேற்று இரவு காற்றில் […]
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் முழுமையாக பணிகள் முடிவடைந்துள்ளது. அதாவது பணிகள் இதுவரை 95 சதவீதம் முடிவடைந்துள்ளது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும். அடையாறில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெறும் பணிகள் கிண்டியில் அயோத்திதாசர் மணிமண்டபப் பணிகள் ஆகியவற்றை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் குறிப்பிடுகையில், ‘ ரூ 2.48 கோடி மதிப்பீட்டில் அயோத்திதாசர் மணிமண்டபம் […]
இது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகை? என வானதி சீனிவாசன் அறிக்கை. கோவை கார் வெடி விபத்து விவகாரத்தில், மூன்று நாட்களாக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் மௌனம் சாதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பி வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான அக்டோபர் 23-ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில், கோவை கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்று வெடித்து சிதறி […]
இன்று சூரிய கிரகணம் நடைபெறும் சமயத்தில் உணவு உண்ணக்கூடாது எனும் இந்து சமய நம்பிக்கைக்கு எதிராக அந்த சமயம் உணவு உண்ணும் ஏற்பாட்டை திராவிடர் கழகம் ஏற்பாடு செய்துள்ளனர். பூமி – நிலவு – சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது . அப்படியான சூரிய கிரகணம் இன்று மாலை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மாலை 5.13 முதல் 5.44 மணி வரையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. […]
அதிமுக தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி. அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், அதிமுக தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தது. ஆணையம் கூறியது உண்மை. குற்றம் செய்யவில்லை என்றால் இவர்களெல்லாம் எதற்காக பயப்படுகிறார்கள். குற்றம் செய்த நெஞ்சம் தான் குறுகுறுக்கும். ஒரு கட்சி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அரசியல் என்று பேசுவது அர்த்தம் இல்லாதது. திமுக […]
லவர பாஜக, பொறுப்பற்ற முறையில், கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது என ஜோதிமணி எம்.பி ட்வீட். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கோவை கார் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து பாஜக தரப்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோவை ஒரு பெருமைக்குறிய தொழில் நகரம். மோடியின் மோசமான ஆட்சியில் தொழில்கள் […]
கோவை கார் வெடிவிபத்து சம்பவத்தை தொடர்ந்து சல்பர் , பொட்டாசியம் போன்ற 75 கிலோ வேதிப்பொருட்கள் மொத்தமாக முபின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்ப்பட்டன. கோவை காவல் ஆணையர் தகவல். கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலை கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்பில் இருந்ததாக, ஜமேசா முபின் நண்பர்கள் முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது […]
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஒரே நாளில் 187 டன் பிளாஸ்டிக்கை அதிகாரிகள் உதவியுடன் கைப்பற்றி மறுசுழற்சிக்கு அனுப்பிவைத்தார். என அமைச்சர் மெய்யநாதன் பேசினார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் பண்டிகை கால பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் பேசினார். அதில், கடந்த 2019 தொடக்கத்தில் 14 வகை பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாநில அரசு தடை விதித்தது. அதே போல, மத்திய அரசும் […]
பூமி – நிலவு – சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது . அப்படியான சூரிய கிரகணம் இன்று மாலை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சூரிய கிரகணம் இந்திய நேரப்படி மாலை 5.13 முதல் 5.44 மணி வரையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இன்று சூரிய கிரகணம் என்பதால் பெரும்பாலான இந்து கோவிகள் நடை சாத்தப்பட்டன. தமிழகத்தில் பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் மதியம் 12 மணிக்கு மூடப்பட்டது. இரவு 7 மணிக்கு […]
சிலிண்டர் விபத்து குறித்து கோயம்புத்தூர் காவல்துறையின் அறிக்கை விசித்திரமாக உள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கார் வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ளோம். என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளோம். தனது இறப்பு குறித்து முன்கூட்டியே வாட்ஸ் அப்பில் ஜமேஷா முபின் பதிவிட்டுள்ளார். இறப்பதற்கு முன்பு ஜமேஷா முபின் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கவில்லை என டிஜிபி கூறுவாரா? […]
மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக , பேரிகார்டு (தடை) வைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு தான் நடைபெறுகின்றன. என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசினார். சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘ மழைநீர் வடிகால் பணிகள் பாதுகாப்பாக , பேரிகார்டு (தடை) வைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் […]
கோவை கார் வெடிவிபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் உடன் ,தொடர்பில் இருந்ததாக, ஜமேசா முபின் நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலை கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த கார் விபத்து ஏற்பட்ட இடத்திலும், ஜமேசா முபின் வீட்டிலும் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் இருந்தது போலீசார் சோதனையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அவர் ஏதேனும் […]
ஆடு வேடமணிந்து திரியும் குள்ளநரிகளின் எண்ணம், சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், கோவையில் நடந்த கார் வெடிவிபத்து குறித்து, கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் கருது தெரிவித்துள்ளார். அந்த பதிவில், தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்திவிட முடியாதா, அதனால் மக்கள் அடித்துக் கொள்ளமாட்டார்களா, அதன் மூலம் தமக்கு அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என ஆடு வேடமணிந்து […]
ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துறை என கே.எஸ்.அழகிரி ட்விட். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள உண்மை தன்மையை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, […]