கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை மக்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் தீபாவளியை கொண்டனர். – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்தும், அதன் மீதான தமிழக அரசு முன்னெடுத்துள்ள துரித நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், கார் சிலிண்டர் வெடிப்பில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 12 […]
தமிழகத்தில் திமுக அரசை கண்டித்து, பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னையில் வள்ளுவர்கோட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் மற்றும், சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் பாஜகவினர் திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், 690 பள்ளிகள் தமிழை முதல் மொழியாக படிக்காமல் மற்ற மொழிகளை கற்பித்து வருகின்றனர். இதனால் தமிழே படிக்காமல் பல மாணவர்கள் கல்லூரி படிப்பு வரையில் செல்கின்றனர். என்றும், மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு, புதிய […]
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வரவுள்ள வாரிசு திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலில் தான் உண்மையில் நடித்திருக்க வேண்டும் என செல்லோர் ராஜு விமர்சனம். மதுரையில் அதிமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட பின்பு அதிமுக உருவான வரலாறு அனைவருக்குமே தெரியும். 50 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சியில் […]
சென்னை அடையாற்றில், அம்பேத்கர் மணிமண்டம் மற்றும் அம்பேத்கர் வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை அடையாறு பகுதியில் அம்பேத்கர் மணிமண்டபம் மறுசீரமைக்கப்பட்டது. மேலும், அந்த மணிமண்டபத்தில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டது. இந்த மணிமண்டபம் மற்றும் அம்பேத்கர் முழு உருவ சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சென்று திறந்து வைத்துள்ளார். இந்த விழாவில், திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் ஆகியோரும், விசிக தலைவர் திருமாவளவன் […]
சென்னையில் 159 நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசல். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் சென்னையில் 159 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் இன்று பெட்ரோல் 1லிட்டர், ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,745-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு […]
அசம்பாவிதங்கள் நடைபெறப்போவது குறித்து ஏதேனும் தகவல் முன்கூட்டியே தெரிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. – கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். கோவையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்து கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். பின்னர் நடந்த விசாரணையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தமிழக காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அமைப்பு […]
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கற்படை. சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்று 7 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த 7 தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் அவர்களது விசைப்படகுகளும் பறிமுதல் […]
கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6-வது நபராக மேலும் ஒருவர் கைது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கோவையில் கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சோதனையில், கார் விபத்து ஏற்பட்ட இடத்திலும், ஜமேசா முபின் வீட்டிலும் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்ட சோதனையில், சிசிடிவி காட்சியின் அடிப்படையில், ஜமேசா முபினுடன் இருந்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான […]
நாங்கள் ஒழுங்காக வேலை செய்தால் உங்களுக்கு வேலை பளு குறைவு. எங்களை மாதிரி ஆட்கள் வந்துகொண்டு தான் இருப்பார்கள். சில நேரம் சிரித்து பேசுவார்கள். சில நேரம் கோபப்படுவார்கள். – திருச்சியில் கே.என்.நேரு பேச்சு. இன்று திருச்சியில் நடைபெற்ற பொது சுகாதர ஆய்வு பணிகள் குறித்த மாநில ஆய்வு கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக அரசின் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டு பேசினார். அதில் குறிப்பிடுகையில், நாங்கள் ஜெயித்தால் மட்டுமே […]
சிவகங்கையில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 221வது குருபூஜை விழாவையொட்டி இன்று இந்த தாலுகாலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம்,தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 இல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 4 மாதமே ஆன நிலையில் வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்ட இரட்டைக்குழந்தை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியாகியுள்ளது, நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி ICMR வழிகாட்டு முறைகளின்படியே இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர் என சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் […]
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பான சுகாதாரத்துறையின் அறிக்கை வெளியாகியுள்ளது.ICMR வழிகாட்டு முறைகளின்படியே இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளனர் என சுகாதாரத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத்தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர். இச்செய்தியை தொடர்ந்து இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் 13.10.2022 உயர்மட்ட விசாரணை குழு […]
டெட் (TET) எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் விரைவில் நடைபெற உள்ளது. இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், டெட் (TET) எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் […]
முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை வருவாய்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவர் ஜெயந்தியின் போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்க, அதிமுக சார்பில் கடந்த 2014-ம் ஆண்டில் 13 கிலோ தங்க கவசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் வரும் 28 முதல் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.அப்பொழுது தங்க கவசமானது தேவர் சிலைக்கு அணிவிக்கப்படும்.அதன் பின்னர் மதுரை அண்ணாநகரில் உள்ள ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியின் […]
அதிமுக அன்பளிப்பாக வழங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் யாரிடம் ஒப்படைக்கபடும் என்கிற தீர்ப்பு வெளியாக உள்ளதால், வங்கி முன்னர் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு 13 கிலோ தங்க கவசத்தை அன்பளிப்பாக வழங்கினார். வருடா வருடம் தேவர் ஜெயந்திக்கு இந்த கவசம் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு, பின்னர் வங்கியில் பத்திரமாக பாதுகாக்கப்படும். தற்போது அதிமுக […]
கோவை கார் வெடிப்பு சம்பவம் என்பது தமிழகத்திற்கு எதோ ஆபத்து வருவதை உணர்த்துவது போல இருக்கிறது. – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைவர் நல்லகண்ணு. கோவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ஜமேஷ் முபின் உதவியவர்கள் 5 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமை செயலகத்தில் […]
ராமேஸ்வரம் கடலில் சாக்கடை நீர் கலப்பதை கண்டித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி. ராமேஸ்வரம் கடலில், பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவு பெறாததால் சாக்கடை நீர் அக்னிதீர்த்த கடல் பகுதியில் கலக்கிறது. இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதிகள், மாவட்ட நிர்வாகம் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர். புனித கடலில் கழிவுநீரா? மக்கள் புனித நீரில் நீராட வருகிறார்களா? சாக்கடை நீரில் நீராட வருகிறார்களா? என்று நீதிபதிகள் கேள்வி […]
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தங்கக்கவச உரிமை வழங்கும் வழக்குக்கான தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு ஒத்திவைப்பு. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்கக்கவச உரிமையை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கா, அல்லது ஒபிஎஸ் தரப்பிற்கா, யாருக்கு வழங்குவது என்பது குறித்து வழக்கின் தீர்ப்பு இன்று 4 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.