தமிழ்நாடு

இப்படியே இருந்தால் தமிழுக்கு சமாதி கட்டிவிடுவார்கள்.! – அண்ணாமலை பேச்சு.!

பல தமிழ்வழி கல்வி பள்ளிக்கூடங்கள் தற்போது மூடப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழுக்கு சமாதி கட்டிவிடுவார்கள்.’ என ஹிந்தி திணிப்பு தீர்மானம் குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.  இந்த வாரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இன்று செய்தியாளர்கள் கேட்டனர். இதுகுறித்து பேசிய அண்ணாமலை, ‘ இந்திய அளவில் அதிகம் பொறியாளர்களை உருவாக்கும் மாநிலமான தமிழகத்தில் தமிழ் […]

- 3 Min Read
Default Image

மீனவர்களுக்கு எச்சரிக்கை – துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். அந்தமான் அருகே வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வந்த நிலையில், தற்போது அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. மேலும் இது வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் பின்னர் அது வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்றும் வானிலை […]

sitrang 3 Min Read
Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு..!

தமிழ்நாடு முதலமைச்சரைத் தலைமையாகக் கொண்டு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைப்பு.  தமிழ்நாடு முதலமைச்சரைத் தலைமையாகக் கொண்டு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தமிழ்நாடு கால நிலை மாற்ற இயக்கத்திற்கு உரிய வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் குழு […]

#MKStalin 2 Min Read
Default Image

சென்னையில் 5ஜி சேவை தொடக்கம்.! ஜியோ நிறுவன தலைவர் காணொளி வாயிலாக துவங்கினார்.!

ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி, காணொளி வாயிலாக சென்னையில் 5ஜி சேவையை துவங்கி வைத்துள்ளார்.  கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்தியாவில் பிரதான முக்கிய நகரங்களில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரையில் ஏர்டல் நிறுவனம் மட்டுமே 5ஜி சேவையை சென்னையில் வழங்கி வருகிறது. தற்போது அதேபோல ,சென்னையில் தனது 5ஜி சேவையை இன்று ஆரம்பித்துள்ளது ஜியோ நிறுவனம்.  இன்று ராஜஸ்தானில் 5ஜி சேவையை ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார். […]

- 3 Min Read
Default Image

மக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக மக்களின் வரி பணத்தில் செயல்படும் அரசு மருத்துவமனையில், மக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 565 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு மருத்துவ பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், தமிழக மக்களின் வரி பணத்தில் செயல்படும் அரசு […]

7.5% உள் இட ஒதுக்கீடு 3 Min Read
Default Image

இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீபாவளியான நாளை மறுநாள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு […]

- 2 Min Read
Default Image

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை பாஜக ஏற்காது – அண்ணாமலை

பயிற்று மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஆணையை பிறப்பித்துள்ளதா திமுக? என அண்ணாமலை கேள்வி.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு யார் காரணம் என ஆணைய அறிக்கையில் தெளிவாக இல்லை அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை பாஜக ஏற்காது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தூண்டிவிட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் அதிக பொறியாளர்களை உருவாக்கும் தமிழகத்தில் தமிழில் […]

#Annamalai 3 Min Read
Default Image

ஜெயலலிதா மரண வழக்கை கிரிமினல் வழக்காக விசாரிக்க கோரிக்கை.! அமைச்சர் ரகுபதி தகவல்.!

சட்டமன்றத்தில் ஜெயலலிதா மரணம் குறித்த ஆணைய அறிக்கையை தாக்கல் செய்யும் போது அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள். இந்த ஆணையம் அளித்த தரவுகளின் அடிப்படையில் சம்பந்தபட்டவர்கள் மீது கிருமினல் வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். என அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதன் உண்மை தன்மை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பல்வேறு […]

#DMK 4 Min Read
Default Image

இம்முறை எதிர்பார்ததற்கு முன்பாகவே மழை பெய்து வருகிறது – அமைச்சர் மூர்த்தி

இம்முறை எதிர்பார்ததற்கு முன்பாகவே மழை பெய்து வருகிறது என அமைச்சர் மூர்த்தி பேட்டி.  மதுரை திருப்பாலை அருகே நிரம்பி உடையும் நிலையில் உள்ள நாராயணபுரம் கம்மாயை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இம்முறை எதிர்பார்ததற்கு முன்பாகவே மழை பெய்து வருகிறது; தண்ணீர் தேங்கும் பகுதிகள், ஆக்கிரமிப்பு பகுதிகளில் பாதிப்பு ஏற்படாத விதமாக ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

#Rain 2 Min Read
Default Image

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா.! பக்தர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.!

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளனர்.     தீபாவளி பண்டிகை முடிந்ததும் அடுத்ததாக இந்து கடவுள் முருகனுக்கு உகந்த திருவிழாவான கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெறும். இதற்காக சிறப்பு பூஜைகளுடன் வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கும். திருச்செந்தூர் கந்தசஷ்டி […]

#Tiruchendur 3 Min Read
Default Image

இது மிகவும் ஆபத்தானது! – அன்புமணி ராமதாஸ்

மழை நீர் தேங்கி ஆறு போல காட்சியளிக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது என அன்புமணி ட்வீட்.  சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடையவில்லை என்றும், இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பெரும்பாலான பள்ளங்களில் இன்னும் பணிகள் நிறைவடையாததால், கடந்த சில நாட்களில் பெய்த மழை நீர் தேங்கி அவை ஆறு […]

ANBUMANI 3 Min Read
Default Image

வெளியூர் செல்வோர் கவனத்திற்கு… போக்குவரத்து துறை அமைச்சர் கூறிய புதிய தகவல்.!

சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், மொத்தமாக 10518 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகின்றன என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  நாளை மறுநாள் தீபாவளி தினம் என்பதால், வெளியூரில் வேலைபார்க்கும் நபர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று முதல் புறப்பட்டனர். அதனால் சென்னை, காஞ்சிபுரம் எல்லையில் வாகன நெரிசல் கூட்டம் அதிகரித்து வருகிறது. வெளியூர் செல்லும் பயணிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதிகளை தமிழக அரசு செய்துள்ளது அதுகுறித்து […]

Diwali2022 3 Min Read
Default Image

தீபாவளி சிறப்பு பேருந்து – நேற்று ஒரே நாளில் 1.65 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து நேற்று ஒரே நாளில் 3300 அரசு பேருந்துகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வெளியூர் பயணம்.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து நேற்று ஒரே நாளில் 3300 அரசு பேருந்துகளில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் […]

bus 2 Min Read
Default Image

மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்ப தடை.! மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

மாநில அரசுகள் இனி தொலைக்காட்சி மற்றும் அது குறித்த சேவைகளை வழங்க தடை விதிக்கப்படுகிறது எனவும், இனி அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக மாநில அரசு சார்பில் தமிழக அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல மற்ற மாநில அரசுகளும் தொலைத்தொடர்பு , தொலைக்காட்சி சேனல்களை நடத்துகின்றனர். ஆனால் தற்போது, இவை அனைத்தையும், மத்திய அரசின் கீழ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் […]

central govt 2 Min Read
Default Image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து குறிப்பில், ‘இன்று 58-வது பிறந்தநாளை கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள், நல்ல ஆரோக்கியத்தையும் அமைதியையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். […]

#OPS 2 Min Read
Default Image

#Gold: தங்கம் விலை அதிரடி உயர்வு, சவரனுக்கு ரூ.600 அதிகரிப்பு.!

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து, ஒரு […]

GoldRateChennai 2 Min Read
Default Image

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு…!

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு.  நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. எச்சரிப்பையும் மீறி, அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் வீரவேல் மீது […]

- 3 Min Read
Default Image

பரபரப்பு : சென்னை தனியார் வங்கியில் தீ விபத்து..!

சென்னையில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் தீ விபத்து. சென்னை மின்ட் தெருவில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில், இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த தீ விபத்தில், வங்கியில் இருந்த காசோலை பண்டல்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், மற்றும் வங்கி தொடர்பான ஆவணங்கள் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது. 

- 1 Min Read
Default Image

சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சென்னையில் 154 நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசல். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் சென்னையில் 154 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அந்தவகையில் சென்னையில் இன்று பெட்ரோல் 1லிட்டர், ரூ.102.63க்கும்,டீசல் 1லிட்டர் ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

chennai petrol price 2 Min Read
Default Image

இந்த அலுவலகங்களுக்கு இன்று மட்டும் விடுமுறை…!

சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்கி வணிகவரி மற்றும்  பதிவுத்துறை செயலாளர் அறிவிப்பு.  தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று, வணிகவரி மற்றும்  பதிவுத்துறை செயலாளர் ஜோதிநிர்மலாசாமி 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை  உத்தரவிட்டுள்ளார். அடுத்தடுத்து வரும் சனிக்கிழமைகளில் இந்த அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

#Holiday 2 Min Read
Default Image