மாநில அரசுகள் இனி தொலைக்காட்சி மற்றும் அது குறித்த சேவைகளை வழங்க தடை விதிக்கப்படுகிறது எனவும், இனி அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாநில அரசு சார்பில் தமிழக அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல மற்ற மாநில அரசுகளும் தொலைத்தொடர்பு , தொலைக்காட்சி சேனல்களை நடத்துகின்றனர். ஆனால் தற்போது, இவை அனைத்தையும், மத்திய அரசின் கீழ் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து குறிப்பில், ‘இன்று 58-வது பிறந்தநாளை கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள், நல்ல ஆரோக்கியத்தையும் அமைதியையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். […]
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து, ஒரு […]
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. எச்சரிப்பையும் மீறி, அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் வீரவேல் மீது […]
சென்னையில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் தீ விபத்து. சென்னை மின்ட் தெருவில் செயல்பட்டு வரும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில், இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில், வங்கியில் இருந்த காசோலை பண்டல்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், மற்றும் வங்கி தொடர்பான ஆவணங்கள் எரிந்து சாம்பல் ஆகியுள்ளது.
சென்னையில் 154 நாட்களாக மாற்றமின்றி விற்பனையாகும் பெட்ரோல் மற்றும் டீசல். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் சென்னையில் 154 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அந்தவகையில் சென்னையில் இன்று பெட்ரோல் 1லிட்டர், ரூ.102.63க்கும்,டீசல் 1லிட்டர் ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்கி வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் அறிவிப்பு. தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கம் சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார் பதிவாளர் இன்று ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று, வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதிநிர்மலாசாமி 100 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை உத்தரவிட்டுள்ளார். அடுத்தடுத்து வரும் சனிக்கிழமைகளில் இந்த அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் பருந்து விமானப்படை முகாமிற்கு தமிழக போலீசார் தீவிர பாதுகாப்பு வழங்கியுள்ளனர். நேற்று நள்ளிரவு, மன்னார் வளைகுடா பகுதியில் காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை பகுதி மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது, கடலோர காவல்படையினர் சந்தேகத்தில் பேரில் படகை நிறுத்துவதற்காக துப்பாக்கியால் சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் வீரவேல் மீது குண்டடி பட்டது. உடனடியாக கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் அழைத்துவந்தனர். அதன் பிறகு தற்போது மேல்சிகிச்சைகாக மதுரை அரசு […]
பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து நேரில் பார்த்தவர்கள் தங்கள் வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் வசம் அளிக்கலாம் என 9498142494 என்ற மொபைல் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தை உலுக்கிய சம்பவம் என்றால் அது சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் தான். கல்லூரி மாணவி சத்யா உயிரிழந்ததை தொடர்ந்து, கொலையாளி சதீஷை தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையின் […]
கந்துவட்டிக்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்றாலும், ஆங்காங்கே அதன் கொடுமைகளை மக்கள் அனுபவித்து தான் வருகின்றனர். அப்படியான சம்பவங்கள் பூதாகரமாக வெளிவரும்போது தான் வெளியுலகிற்கு தெரியவருகிறது. அப்படித்தான் சேலம் மாவட்டம் டி.பெருமாபாளையம் எனும் ஊரில் இருந்த கந்துவட்டி கொடுமை வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது. டி.பெருமாபாளையம் ஊரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரும் அவரது குடும்பத்தாரும் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வசூலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து அதே ஊரை சேர்ந்த ரவீந்தரின் என்பவர் தட்டிக்கேட்டதால், […]
அறிவாலயம் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முதல்வர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயம் சென்று கொண்டிருந்த போது, சாலையில் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்துள்ளார். அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது சென்னை, அண்ணா சாலை, டி.எம்.எஸ் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சூளைமேட்டைச் சேர்ந்த திரு.அருள்ராஜ் என்பவர் சாலையில் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டதை கண்டு கான்வாய் வாகனத்தை […]
துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பொறுப்பில் இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய வட்டாச்சியர்கள் சஸ்பெண்ட் – தமிழக அரசு நடவடிக்கை. கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தாமிர உருக்கு ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உண்மை தன்மை ஆராய நீதிபதி அருணா ஜெகதீசன் […]
நமது நாட்டு கடற்படையினரே, நமது மீனவர்களை சுட்டது வருத்தமளிக்கிறது. இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்கள் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையையும், பாதுகாப்பற்ற உணர்வையும் இது ஏற்படுத்தும். என முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று நள்ளிரவில் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துவந்த மயிலாடுதுறை மீனவர்களை சந்தேகத்தின் பேரில் எச்சரிப்பதற்காக இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர் வீரவேல் என்பவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. குண்டடிபட்ட […]
தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய என சீமான் வலியுறுத்தல். நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்தும் மீன்பிடித்த காரணத்தால், காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் […]
இந்திய கடற்படையால் சுடப்பட்டு காயமடைந்த மீனவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவு நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. எச்சரிப்பையும் மீறி, அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக […]
பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சிறுத்தை ஒன்று இறந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என தேனி எம்.பி ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மாதம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சிறுத்தை ஒன்று இறந்துபோனது. இந்த திடீர் உயிரிழப்பு தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சிறுத்தை இறந்து கிடந்த நிலமானது தேனி எம்பி ரவீந்தரநாத்திற்கு சொந்தமான இடம் என கூறப்படுகிறது. இதனால் சிறுத்தை […]
உள்நாட்டு மீனவர்களை அடையாளம் காணாததும், எச்சரிக்கை வழங்கியும் படகு நிற்காததால் சுட்டோம் எனக் கூறுவதும் ஏற்க முடியாது என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. எச்சரிப்பையும் மீறி, அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி […]
ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என சீமான் வலியுறுத்தல். ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ’20 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் கூட வழங்காமல் கொத்தடிமைகள் போல நடத்தும் தமிழ்நாடு அரசின் செயல் ஏற்றுக்கொள்ள […]
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுக்கடலில் சந்தேகப்படும்படியாக படகு நின்றதாலும், அதனை முன்னேறவிடாமல் தடுக்கவே படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கடலோர காவல்படையினர் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது . நேற்று நள்ளிரவு மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர் . இந்த துப்பாக்கி சூட்டில் வீரவேல் எனும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் குண்டடி பட்டு காயமுற்றார். இவருக்கு ராமநாதபுரத்தில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, துப்பாக்கி குண்டை அகற்றுவதற்கும், […]