தமிழ்நாடு

தமிழக அரசின் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுங்கோன்மையாகும் – சீமான்

ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என சீமான் வலியுறுத்தல்.  ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ’20 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் கூட வழங்காமல் கொத்தடிமைகள் போல நடத்தும் தமிழ்நாடு அரசின் செயல் ஏற்றுக்கொள்ள […]

- 3 Min Read
Default Image

#Rain Alert : இந்த 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு …!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Rain 2 Min Read
Default Image

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு.! சந்தேகப்படும்படி இருந்ததால் சுட்டோம்.! கடற்படை விளக்கம்.!

நடுக்கடலில் சந்தேகப்படும்படியாக படகு நின்றதாலும், அதனை முன்னேறவிடாமல் தடுக்கவே படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கடலோர காவல்படையினர் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது .   நேற்று நள்ளிரவு மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர் . இந்த துப்பாக்கி சூட்டில் வீரவேல் எனும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் குண்டடி பட்டு காயமுற்றார். இவருக்கு ராமநாதபுரத்தில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, துப்பாக்கி குண்டை அகற்றுவதற்கும், […]

- 4 Min Read
Default Image

எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து அவர்களை கைது செய்தது தவறு – ஜி.கே.வாசன்

போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து அவர்களை கைது செய்தது தவறு என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் ஏபிஎஸ் தலைமையில், போராட்டம் நடைபெற்ற நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஈபிஎஸ் உள்ளிட்டோரை பார்க்க ஜி.கே.வாசன் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன், சட்டசபையில் இபிஎஸ் வைத்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் […]

GKVasan 3 Min Read
Default Image

காஞ்சிபுரம் : சொகுசு விடுதியில் 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு.!

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சொகுசு விடுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்திகரிக்கும் போது 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் பிரபல சொகுசு விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய 3 தொழிலாளர்கள் வந்துள்ளனர் அவர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போதே விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளனர். அதன் பின்னர் உயிரிழந்துள்ளானர். இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் வந்து, கழிவுநீர் தொட்டியில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் […]

- 2 Min Read
Default Image

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.! அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு.!

நேற்று நள்ளிரவில் தெற்கு மன்னர் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் – தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் உட்பட 10 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து வந்துள்ளனர். அப்போது நேற்று நாளிரவு அவர்கள் மீது இந்திய காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் மயிலாடுதுறையை சேர்ந்த வீரவேல் எனும் மீனவர் மீது […]

- 4 Min Read
Default Image

இந்தியக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது – டாக்.ராமதாஸ்

காயமடைந்த மீனவர் வீரவேலுக்கு தரமான மருத்துவம் அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை.  நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. எச்சரிப்பையும் மீறி, அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக […]

- 4 Min Read
Default Image

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பணியிலிருந்த காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்…!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பணியிலிருந்த காவல் ஆய்வாளர் திருமலை பணியிடை நீக்கம். கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த […]

- 3 Min Read
Default Image

ஆம்புலன்ஸ் விபத்து – கர்ப்பிணி பெண் உட்பட 2 பேர் உயிரிழப்பு..!

சிவகங்கை மாவட்டம் செங்குளம் பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று மரத்தில் மோதியதில் கர்ப்பிணி பெண் உட்பட 2 பெண்கள் உயிரிழப்பு.  சிவகங்கை மாவட்டம் செங்குளம் பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று கர்ப்பிணி பெண்ணை ஏற்றி சென்ற நிலையில், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஆம்புலன்சில் 21 வயதான கர்ப்பிணி பெண் நிவேதா மற்றும் அவரது தாயார் இருந்தனர். இந்த நிலையில், இந்த விபத்தில், கர்ப்பிணிப் பெண் நிவேதா மற்றும் தாய் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ் […]

#Accident 2 Min Read
Default Image

நள்ளிரவில் தமிழக மீனவரை சுட்டது எதற்காக.? இந்திய கடற்படையினர் என்ன செய்தார்கள்.?

எல்லை தாண்டி  மீனவர்கள் மீன் பிடித்ததாகவும், அதனை எச்சரிக்க படகை நோக்கி இந்திய காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக தமிழக மீனவர் வீரவேல் மீது குண்டு பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது . மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். நேற்று அவர்கள் கோடியக்கரை […]

- 4 Min Read
Default Image

சொன்னதை செய்வார் மோடி! – அண்ணாமலை

பிரதமர் மோடி சொன்னதை செய்வார்  என அண்ணாமலை ட்வீட்.  பிரதமர் மோடி, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மத்திய அரசு பணிகளில் 10 லட்சம் பேரை விரைந்து பணியமர்த்துவற்கான  துவக்க நடவடிக்கையாக சிறப்பு முகாமினை தீபாவளி அன்று தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த ஆண்டு ஜூன் மாதம், நமது மாண்புமிகு பாரத பிரதமர் மோடி  அவர்கள், 18 மாதங்களுக்குள் பொதுத் துறையில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் […]

#Annamalai 3 Min Read
Default Image

#Gold: தங்கம் விலை மேலும் சரிவு, சவரனுக்கு ரூ.160 குறைந்தது.!

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு […]

GoldRateChennai 2 Min Read
Default Image

காங்கிரஸ் புதிய தலைவர் மீது விமர்சனம்.! திமுக செய்தி தொடர்பாளர் அதிரடி சஸ்பெண்ட்.!

காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்ததாக திமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக உட்கட்சி தேர்தல் மூலம் மல்லிகார்ஜுனா கார்கே தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் புதிய தலைவர் பற்றி சர்ச்சையான கருத்துக்களை திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு பின்னர் நீக்கிவிட்டார். திமுகவுடன் கூட்டணியில் […]

#DMK 3 Min Read
Default Image

Petrol Price : சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று (அக்-21), பெட்ரோல் விலை 10 காசுகளும், டீசல் விலை 9 காசுகளும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24க்கும் விற்கப்பட்டது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகளும், டீசல் விலை […]

- 2 Min Read
Default Image

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.  தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழையின் காரணமாக சில பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர். அதன்படி, கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

#Rain 2 Min Read
Default Image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மூன்று நாட்களுக்கு தினமும் தலா 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்பு பேருந்துகள் என 10 ஆயிரத்து 518 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து இன்று முதல் 23ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் […]

#Diwali 2 Min Read
Default Image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் இன்று முதல் சிறப்பு காட்சிக்கு அனுமதி…!

தீபாவளிக்கு திரையரங்குகளில் இன்று முதல் சிறப்பு காட்சிகள் வெளியிட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் சிரமங்களை தவிர்க்கவும், பாதுகாப்பான, மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாடும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தீபாவளிக்கு இன்று முதல் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

diwali 2022 2 Min Read
Default Image

காவிரி கரையோர மக்கள் கவனத்திற்கு…. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு.!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரிநீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது. இதனால், காவிரி கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளவு எட்டியுள்ள காரணத்தால் அணைக்கு வரும் நீர் வரத்து அப்படியே திறந்துவிடப்படுகிறது. இதனால், தற்போது மேட்டூர் அணையில் […]

kaveri river 2 Min Read
Default Image

விடியா அரசுக்கு நன்றி – ஜெயக்குமார்

அ.தி.மு.க-வின் பலம் என்ன என்று காட்டுவதற்கும் உதவி செய்த விடியா அரசுக்கு நன்றி என ஜெயக்குமார் ட்வீட்.  நேற்று சென்னையில், இபிஎஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் […]

#ADMK 3 Min Read
Default Image

ஆசிரியர் நியமன வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு.! வெளியானது தமிழக அரசாணை.!

ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45ஆகவும், இடஒதுக்கீட்தில் உள்ள பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே போல, அவர்களுக்கான வயது வரம்பு பற்றிய விவரங்களும் வெளியாகி உள்ளன. அதில் பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு […]

- 4 Min Read
Default Image