கனமழை காரணமாக திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மழையின் காரணமாக சில பள்ளிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர். அதன்படி, கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மூன்று நாட்களுக்கு தினமும் தலா 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்பு பேருந்துகள் என 10 ஆயிரத்து 518 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து இன்று முதல் 23ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் […]
தீபாவளிக்கு திரையரங்குகளில் இன்று முதல் சிறப்பு காட்சிகள் வெளியிட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் சிரமங்களை தவிர்க்கவும், பாதுகாப்பான, மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாடும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தீபாவளிக்கு இன்று முதல் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரிநீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது. இதனால், காவிரி கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளவு எட்டியுள்ள காரணத்தால் அணைக்கு வரும் நீர் வரத்து அப்படியே திறந்துவிடப்படுகிறது. இதனால், தற்போது மேட்டூர் அணையில் […]
அ.தி.மு.க-வின் பலம் என்ன என்று காட்டுவதற்கும் உதவி செய்த விடியா அரசுக்கு நன்றி என ஜெயக்குமார் ட்வீட். நேற்று சென்னையில், இபிஎஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் […]
ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45ஆகவும், இடஒதுக்கீட்தில் உள்ள பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே போல, அவர்களுக்கான வயது வரம்பு பற்றிய விவரங்களும் வெளியாகி உள்ளன. அதில் பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 40-ல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதர பிரிவினருக்கான வயது உச்ச வரம்பு […]
தமிழகத்தில் வரும் 28ம் தேதி முதல் தலைக்கவசம் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வரும் 28ஆம் தேதி தலைக்கவசம் நிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாதவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர் அல்லது பின்னால் இருப்பவரோ தலைக்கவசம் அணியாவிட்டாலும் அபராதம் விதிக்கப்படும் […]
தமிழகத்தில் நான் மூக்கையும் நுழைப்பேன், வாயையும் நுழைப்பேன். வாலையும் நுழைப்பேன். காலையும் வைப்பேன். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என தமிழிசை சவுந்தராஜன் பேசினார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுசேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்துவ வருகிறார். இதில், தெலுங்கானா ஆளுநராக அவர் பதவியேற்று இன்றோடு மூன்றாண்டுகள் ஆகிறது. அதனை குறிப்பிடும் வகையில், புத்தக கண்காட்சி நடைபெற்றது. அதில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் […]
உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவ. 1-ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் உத்தரவு. உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவ. 1-ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் இயக்கக ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், ஊரக வளர்ச்சி ,ஊராட்சித் துறையில் மாவட்ட அலுவலகத்தில் ஏதேனுமொரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பணிகள் குறித்த கண்காட்சி நடத்தாலம் என்றும், ஏதேனும் ஒரு ஊராட்சியில் ஆட்சியர் […]
எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்பு வந்தது ,ஆனால் மக்களோடு மக்களாகத்தான் இருப்பேன் என்று கூறிவிட்டேன் என தமிழிசை பேச்சு. தெலுங்கானா ஆளுநராக பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றது முன்னிட்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எனது அப்பா ஒரு தேசிய கட்சித் தலைவர் , அதற்கு நேர்மாறான தேசியக் கட்சியில் நான் தலைவராக இருந்தது தமிழகத்திற்கு செய்த மிகப்பெரும் கடமையாக நினைக்கிறேன். எப்போதும் இயல்பாக […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை அறிக்கை வெளியான சமயத்தில் ஜெயலலிதா மருத்துவரிடம் பேசுவது போல ஒரு ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணை குழு சட்டசபையில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் சசிகலா, […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் 22 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிப்பு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணிப்பதுண்டு. பேருந்துகள், ரயில்கள் என தங்களது பயணத்தை மேற்கொள்ளும் நிலையில் மக்கள் இடையூறின்றி பயணத்தை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது […]
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர உள்ளதாக கேள்வி படுகிறேன். அதனால் அதன் மீது கருத்து கூற முடியாது. – ஓ.பன்னீர்செல்வம் கருத்து கூறினார். வரும் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக அதிமுக கட்சி சார்பாக முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. தற்போது இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு அணியினராக இருப்பதால், இரு தரப்புமே தங்க […]
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், நெல்லை, சேலம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் கன மழை பெய்ய […]
மருந்து கடைகளில் போதை தரும் மருந்துகளை விற்றால், மருந்து கடையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு. தமிழகத்தில் சமீப நாட்களாக போதை பொருட்களை தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருந்து கடைகளில் போதை தரும் மருந்துகளை விற்றால், மருந்து கடையின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. போதை தரும் மருந்துகளை […]
இந்தியாவில் வாகன போக்குவரத்து அதிகமாகி கொண்டே போகிறது. அதே போல் வாகன விதிகளை மீறி வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க மத்திய அரசு புதிய போக்குவரத்து விதிகளை அறிமுகப்படுத்தியது. மத்திய அரசு குறிப்பிட்ட வாகன விதிகள் நேர்க்காட்டுதலின்படி, தமிழக போக்குவரத்து காவல்துறை புதிய விதிமுறைகளை இன்று முதல் அறிவித்துள்ளது. அதில் பல்வேறு விதிமுறைகளும், அதற்கான அபராத தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை கிழே பார்க்கலாம்… குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது […]
கோவையில் இருந்து சென்னைக்கு வர எனக்கு விமான டிக்கெட் 3,300 ரூபாய். ஆனால் ஆம்னி பேருந்து கட்டணம் என்பது 3,700 ரூபாயாக இருக்கிறது. இதனை அரசு குறைக்க நடவடிக்கை வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்தார். பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் , மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்தார். அவர் பேசுகையில், ‘ நேற்று ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்து […]
முதலமைச்சர் ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாக எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றசாட்டை நிரூபித்தால் ஓபிஎஸ்-ம், நாங்களும் அரசியலை விட்டு விலக தயார் என ஜே.சி.டி.பிரபாகர் சவால். நேற்று சென்னையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கபட்டனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ்-ஐ பீ டீமாக வைத்து அதிமுகவை பிளக்க பார்க்கிறார்.ஸ்டாலின்- ஓ.பி.எஸ் நேற்று அரை மணி […]
நானும், முதல்வர் ஸ்டாலினும் பேசியதை அவர்கள் நிரூபித்து விட்டால் நாங்கள் அரசியலை விட்டு விலகி விடுகிறோம். நிரூபிக்க தவறினால் அதேபோல அவர்கள் விலக தயாரா? என ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தங்களுக்கு (அதிமுக) உரிமை பறிக்கப்பட்டதாகவும், எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிகக்காததற்கும் எதிர்த்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அந்த […]
ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடாமல் செல்வோருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. பொதுவாகவே ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்றவை அவசரமாக செல்லும் போது, முன் செல்லும் வாகன ஓட்டிகளும், எதிரே வரும் வாகன ஓட்டிகளும் வழி விட்டு செல்வதுதான் வழக்கம். ஆனால் இதிலும் சிலர் வழி விடாமல் செல்வதுண்டு. இதனால் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு செல்ல முடியாமல் சில நேரங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறையினர் சிரமப்படுவதுண்டு. […]