சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,685-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, […]
தமிழக பொறியியல் கல்லூரிகளின் தலைமை கல்லூரியாக செயல்படும் சென்னை அண்ணா பல்கலைகழகமானது, கடந்த 2016ஆம் ஆண்டு மாணவர்களின் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவது, வெற்று சான்றிதழ் அச்சடிப்பது தொடர்பாக கொடுக்கப்பட்ட காண்டிராக்ட் விவகாரத்தில் சுமார் 77 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தணிக்கை குழு அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைகழக கட்டுப்பாட்டின் கீழ் பயிலும் மாணவர்களின் சான்றிதழ்கள், தரவரிசை சான்றிதழ்கள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்குவதற்கு 2தனியார் நிறுவனங்களுடன் அண்ணா பல்கலை கழகம் 11 […]
மது அருந்தியவர் வாகனம் ஓட்டும்போது, அவருடன் பயணித்தால் இனி அபராதம் என சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சாலை விபத்துகள் தினம் தினம் எண்ணிக்கை இல்லாமல் நிகழ்ந்து வருகின்றன. பெரும்பாலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், சாலை விதிமுறை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுவதால் இந்த விபத்துகள் நடக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த போக்குவரத்துக் காவல்துறை, தற்போது புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளது. மது அருந்தி விட்டு வண்டி ஓட்டுபவர்களுடன் பயணிக்கும் நபருக்கும் வழக்கு பதிவு செய்யப்படும், மேலும் அபராதம் விதிக்கப்படும் […]
அனைத்து தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களிலும் இசேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களிலும் கணினி இன்று வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவை பெறுவதற்கு அரசு அலுவலகங்களில் அமைந்திருக்கும் இசேவை மையங்களை நாட வேண்டி இருக்கும். தற்போது அதனை இன்னும் எளிமையாக மாற்ற தமிழகக்கத்தில் உள்ள அனைத்து தொகுதி எம்எல்ஏ அலுவலகங்களிலும் இசேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களிலும் கணினி இன்று வழங்கப்பட்டுள்ளது. இதற்கென 10 வெவ்வேறு […]
தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் சிரமங்களை தவிர்க்கவும், பாதுகாப்பான, மகிழ்ச்சியான தீபாவளியை கொண்டாடும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் வெளியிட அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் 2 மாதம் இடைக்கால தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக கூறி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் அவருக்கு நெருக்கமான குடும்பத்தார்கள் சிலர் மீதும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தது. அந்த தடையை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் […]
சென்னையில் இன்று (அக்-20), பெட்ரோல் விலை 10 காசுகளும், டீசல் விலை 9 காசுகளும் குறைந்து பழைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.73க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.94.33க்கும் விற்கப்பட்டது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகளும், […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் நாளை முதல் வரும் 23ஆம் தேதி வரை 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து மூன்று நாட்களுக்கு தினமும் தலா 2,100 பேருந்துகளுடன் 4,218 சிறப்பு பேருந்துகள் என 10 ஆயிரத்து 518 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து நாளை முதல் 23ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் […]
சென்னைக்கு புதியதாக வரும் பலரும் அதிகமாக செல்வது, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் தான். அதனை தடுக்கவே, கடலுக்கு நடுவே பேனா சிலை அமைக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றசாட்டு. சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கு , 650 மீ தொலைவில் கடலுக்கு நடுவே பிரமாண்ட பேனா சிலை நிறுவ திமுக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக 81 கோடி ரூபாய் […]
பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று பேச்சுவார்த்தை. ஆவின் பால் கொள்முதல் விலை, விற்பனை விலை உயர்வு குறித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு பசும்பால் லிட்டருக்கு ரூ.42, எருமைப்பால் லிட்டருக்கு ரூ.51 என கொள்முதல் விலையை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், அக்.28-ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்காமல் போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, […]
சட்டமன்றத்தைப் பொறுத்தவரை அது திமுகவின் அறிவாலயமாக மாறிவிட்டது என ஜெயக்குமார் பேட்டி. சட்டசபையில் அதிமுகவின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக கூறி, இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தனர். அதற்கு இபிஎஸ் தரப்பில் இருந்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால் அனுமதி அவர்களுக்கு மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தியதால், இபிஎஸ் […]
தடை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிக்கப்பட்டனர். நேற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை சபாநாயகர் வெளியேற சொல்லி உத்தரவிட்டார். இந்த நடவடிக்கைகளை கண்டித்து, சட்டசபையில் அதிமுகவின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக கூறி, இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு அதிமுக […]
காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுனே கார்கேவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்விட். காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் கடந்த 17-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இதனையடுத்து இன்று 9500 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகள் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றார். சசிதரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதனையடுத்து […]
நேற்று எடப்பாடி பழனிசாமி கலவர நாடகத்தை நடத்தி,வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வுகள் நிமிட வாரியாக எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும் என அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியுள்ளது. உளவுத்துறை தகவல் தெரிவித்தும் சட்ட ஒழுங்கு நிலை கவனிக்கப்படாமல் இருந்தது; தீவிரமாக கவனித்திருந்தால் ஆரம்பத்திலேயே சமாளித்திருக்கலாம் என அறிக்கை. எடப்பாடி பழனிசாமி அசட்டையாக இருந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது; நேற்று எடப்பாடி […]
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக, சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவிதத்தர். நேற்று முன் தினம் தொடங்கிய தமிழக சட்டப்பேரவை இன்று மூன்றாவது நாளில் நிறைவு பெற்றுள்ளது. முதல் நாள் சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர் அதன்பின்னர், நேற்று இரண்டாம் நாள் கூட்டத்தொடர் ஆரம்பத்திலேயே இபிஎஸ் தரப்பினர், எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்டனர். அதன் […]
காங், தலைவர் தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என ஜோதிமணி எம்.பி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் தற்போது 9500 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன. சசிதரூர் 1,072 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இதனையடுத்து மல்லிகார்ஜுன கார்கே தலைவராக […]
பயணிகளை கையாள்வதிலும், சரக்கு கையாள்வதிலும் முன்னேற்றம் அடைவதற்காக தான் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவதாகவும், 11 இடஙக்ளில் ஆராய்ந்து பின்னர் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையம் அடுத்து புதியதாக சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு சுமார் 4790 ஏக்கர் நிலங்கள் இதற்காக கையப்படுத்தப்பட உள்ளன. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடுமையாக […]
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு கூடுதலாக தமிழக அரசு சார்பில் 5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தாமிர உருக்காலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் […]
தூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரத்தில், அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிதான், அனைத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று இறுதிநாள் கூட்டம் நடைபெறவுள்ளது. நேற்றைய கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தூத்துக்குடி, ஸ்டெர்லைட் போராட்டத்திக் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகள் […]
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சில மாவட்டங்களில் தற்போதிருந்தே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களிலுல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]