ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று இறுதிநாள் கூட்டம் நடைபெறவுள்ளது. நேற்றைய கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்துள்ளார். […]
கல்விநிறுவனங்களில் நடைபெறும் இயற்கைக்கு மாறான மரணங்கள் தேவை இருப்பின் மட்டும் சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும். மற்றபடி, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி காவல் நிலைய அதிகாரிகளே விசாரிக்கலாம். – உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு. கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்தார். இவர் உயிரிழப்பில் உண்மை தன்மை ஆராய இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது. அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் இயற்கைக்கு மாறாக […]
மத்திய அரசின் இந்தி திணிப்பு என்று கூறுவது வாக்கு வங்கியின் அரசியலுக்காகவே என ஜி.கே.வாசன் ட்வீட். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு. கடந்த சில நாட்களுக்கு முன், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று முன்தினம் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி முதல் நாள் இரங்கல் கூட்டத்தொடர் நடைபெற்றது. நேற்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை ஆகியவை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதே போல நேற்று ஹிந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே போல எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பான பிரச்சனை காரணாமாக வெளிநடப்பு செய்தனர் அதன் […]
பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநரின் பொறுப்பு. பேருந்து படிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிப்பதால், விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அனைத்து பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநரின் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ்-ஐ பீ டீமாக வைத்து அதிமுகவை பிளக்க பார்க்கிறார் என ஈபிஎஸ் குற்றசாட்டு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதாக இபிஎஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் […]
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, […]
தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதாக இபிஎஸ் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடததப்படும் என நேற்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை. இதனையடுத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை செய்யப்பட்டதாக இபிஎஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், […]
ஜெயலலிதா இறந்தவுடன் காலம் தாழ்த்தாமல் முதல்வர் பதவிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார் ஓபிஎஸ். அதன் பின்னர் நடந்த அரசியல் சம்பவங்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால், கோவம் வந்து ஓபிஎஸ் தனது சுய லாபத்துக்காக தர்மயுத்தம் தொடங்கினார். – என ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் ஓபிஎஸ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது நேற்று சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவன் மரணம் தொடர்பான உண்மைகளை அறிய விசாரணை மேற்கொள்ள நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணைய […]
சென்னையில் இன்று (அக்-19), பெட்ரோல் விலை 10 காசுகளும், டீசல் விலை 9 காசுகளும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அதிரடியாகக் குறைத்ததன் விளைவாக பெட்ரோல் […]
மக்கள் திமுக ஆட்சி மீது மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். கண்டா வர சொல்லுங்க. எடப்பாடியை கையோடு கூட்டி வாருங்கள் என ஏங்கி இருக்கின்றனர். – அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மேடையில் குறிப்பிட்டுள்ளார். இன்று அதிமுக சார்பில் விருதுநகரில் அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். அதில் பேசிய முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திமுக பற்றி சரமாரி குற்றசாட்டுகளை முன்வைத்தார். அதே போல, […]
சட்டப்பேரவையில், இன்று ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று இறுதிநாள் கூட்டம் நடைபெறவுள்ளது. நேற்றைய கூட்டத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை […]
இன்று வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு பெற்ற ஆர்.பி.உதயகுமார் தான் எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்க வேண்டும். என சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். இது சட்டப்பேரவையில் அமளியாக மாறியது. பின்னர் சபாநாயகர் அப்பாவு உத்தரவின் பேரில் இபிஎஸ் மற்றும் அவரது அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியில் சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து தனது எதிர்ப்பை கண்டனங்களாக தெரிவித்தார். இந்நிலையில் […]
மக்கள் வரிப்பணத்தை வீணாக்க, அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது ஆணையம் என டிடிவி தினகரன் பேச்சு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி தினகரன் அவர்கள், ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது தான். ஜெயலலிதாவின் மரணம் குறித்து சர்ச்சைகளை எழுப்பியதே திமுக தான். மக்கள் வரிப்பணத்தை வீணாக்க, அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது ஆணையம் என தெரிவித்துள்ளார். மேலும், எய்ம்ஸ் மருத்துவர்களின் […]
நியாயமான முறையில் நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்க அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மநீம அறிக்கை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த ஆணையம் கடந்த 3 வருடமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து மநீம, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், தனது இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்த […]
தமிழர்கள் யாரும் வடமாநிலங்களுக்கு சென்று வேலை தேடும் நிலை இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதற்க்கு அரசியல் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அமைச்சர் மனோ தனகாரஜ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மொழி உரிமையை பாதுகாக்க தோன்றிய இயக்கம் திமுக! பிற மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையும் திமுக என்றும் ஏற்றுக் கொள்ளாது. இந்தி […]
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது என மநீம ட்வீட். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இதுகுறித்து மநீம தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அலுவல் மொழி […]
இந்தி மேலாதிக்கம் நம்மை ஆள்வதை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என முதல்வர் ட்வீட். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அமித்ஷா குழுவின் பரிந்துரைகள், இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். இந்திமொழி திணிப்பு தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. தமிழினத்தை தமிழரை பண்பாட்டை காக்கும் போராட்டமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறோம். அனைத்து இந்திய தேர்வுகளையும் இந்தி மயமாக்க துடிக்கிறார்கள். இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் […]
தமிழ் வழியில் படிக்கும் திமுக நிர்வாகிகளின் பிள்ளைகள் பட்டியலை வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் பேச்சு. இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதலமைச்சர், குடியரசு தலைவருக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. இது இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். தமிழினத்தை தமிழரை பண்பாட்டை காக்கும் போராட்டமாக தொடர்ந்து […]