மதுரை ஆதீனம் ஆன்மீக மடமாக செயல்படுகிறதா.? அல்லது வியாபார நிறுவனமாக செயல்படுகிறதா என மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை ஆதீனத்திற்கு சொத்தான இடங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில், மதுரை ஆதீனத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் இருக்கின்றன. அந்த சொத்துக்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆதீனத்திற்கு சொந்தமான சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் […]
ரயில் பயணிகள் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணத்தின்போது கொண்டு செல்ல வேண்டாம். என தென்னக ரயில்வே துறை மக்களுக்கு துண்டு பிரசுரம் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறிப்பிட்டுள்ளது. தீபாவளி என்றாலே, புத்தாடை, பட்டாசு தான் நம் நினைவில் வந்துவிடுகிறது. அதில் பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, பேருந்து, ரயில் என […]
வேகத்தை குறைத்து விபத்துக்களை தடுப்பது பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு. கோவை பேரூர் பகுதியில் யானைகள் வழித்தடங்களில் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் பாதுகாப்பது தொடர்பான வழக்கில் ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை செயல்படுத்தி நவம்பர் 24-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் யானைகள் வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை குறைத்து விபத்துக்களை தடுப்பது பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்க […]
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி தமிழக அரசு அரசாணை வெளியீடு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சசிகலா, உறவினரான சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ், சுகாதாரத்துறை […]
சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் பதில். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக இந்த ஆணையம் கடந்த 3 வருடமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று தமிழக அரசால் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், 2012-ல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா, சசிகலா இடையே சுமுக […]
சட்டப்பேரவை நேற்று இரங்கல் தீர்மானங்களுடன் நிறைவடைந்த நிலையில், இன்று, இரண்டாவது நாள் சட்டப்பேரவை கூட்டம் அதிமுகவினர் அமளி, இரண்டு விசாரணை கமிஷன் அறிக்கைகள், ஹிந்தி எதிர்ப்பு தீர்மானம் உள்ளிட்ட நிகழ்வுகளோடு நிறைவடைந்துள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முதல் நாள் தொடங்கி, இரங்கல் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. காலை இபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக […]
தமிழக அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை அதிமுக முழு மனதாக ஆதரவு தெரிவிக்கிறது. – ஓபிஎஸ் சட்டப்பேரவையில் பேச்சு. மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதலமைச்சர், குடியரசு தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குழு அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இந்தி எதிர்ப்பு தீர்மானத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். […]
சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டப்பேரவையில், பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ்-ஐ எதிர்க்கட்சி துணை தலைவராக வைக்க கூடாது. அதற்கு பதிலாக அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு பெற்ற ஆர்.பி.உதயகுமார் தான் எதிர்க்கட்சி துணை தலைவராக இருக்க வேண்டும். என சட்டப்பேரவையில் […]
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க மூத்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தும், கடைசி வரையில் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவில்லை என பல்வேறு குற்றசாட்டுகளை நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்தில் உள்ள உண்மை தன்மையை ஆராய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழு அமைத்து அந்த விசாரணை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது . அந்த அறிக்கையில் இருந்து பல்வேறு […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தவில்லை என அறிக்கையில் தகவல். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே இறந்த 5 பேர்களின் கைகளில் எந்த ஆயுதமும் இல்லை, முதல் துப்பாக்கிசூடு நடைபெற்று உயிரிழப்பு ஏற்பட்ட பின்னர் தான் ஆட்சியர் வளாகத்திற்குள் முதல் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. காவலர் சுடலைக்கண்ணு […]
ஒரே நாடு ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அளிக்க முயற்சி என இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தில் முதலமைச்சர் உரை. மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதலமைச்சர், குடியரசு தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குழு அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. அமித்ஷா குழுவின் பரிந்துரைகள், இந்தி பேசாத மாநில […]
ஜெயலலிலதா மரணம் தொடர்பான அறிக்கை தாக்கல், தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான அறிக்கை தாக்கல். அதன் மீதான விவாதங்கள் சட்டப்பேரவையில் நடைபெறும் என பயந்து தான் இபிஎஸ் தரப்பினர் வெளிநடப்பு செய்கிறார்கள். என தமிழக அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டினார். தமிழக சட்டபேரவை நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாள் கூட்டத்தை புறக்கணித்த இபிஎஸ் இன்று அவரது ஆதர்வாளர்களோடு கலந்து கொண்டார். கலந்துகொண்டது முதலே, எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பாக தொடர் அமளி சட்டப்பேரவையில் நடந்தது. இதனை தொடர்ந்து, […]
2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிசூடு தொடர்பான விசாரணையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் தனியார் தொழிற்சாலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு […]
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பையும் நாங்கள் குறிப்பிட்டோம். ஆனால் தீர்ப்புக்கு மாறாக சபாநாயகர் செயல்படுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை படி சபாநாயகர் செயல்படுகிறார். – என தங்கள் தரப்பு கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார். தமிழக சட்டப்பேரவை தொடங்கி இரண்டாவது நாளான இன்று இபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன்கலந்து கொண்டார். அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் கடுமையான சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் […]
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை பேரவையில் தாக்கல். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த அறுமுகசாமியின் ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பேரவையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் அமளி காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கையில், 2012-ல் மீண்டும் இணைந்த […]
சட்டப்பேரவை விதியின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவியாகும் என சபாநாயகர் விளக்கம். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பேரவையில் இருந்து வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்பின், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு அங்கீகாரம் இல்லை. சட்டப்பேரவை விதியின் கீழ் எதிர்க்கட்சி தலைவர் பதவி மட்டுமே […]
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, […]
சட்டப்பேரவையில் இருந்து பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற சபாநாயகர் உத்தரவு. தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தலைவர் தொடர்பாக அறிவிப்பேன் என தெரிவித்தும் அமளியில் ஈடுபட்டதால், இருக்கைக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்ற […]
1988, 1989 இல் நடந்தமாதிரி இன்றைய சட்டப்பேரவையில் நடக்காது. இந்தி திணிப்பு மசோதவை கண்டு பயந்து விட்டீர்கள். யாருக்காகவோ கட்டுப்பட்டு இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்ற நோக்கத்தோடு அமளியில் ஈடுபடுகிறீர்கள். – என சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார். தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய பேரவையை புறக்கணித்த இபிஎஸ் தரப்பினர், இன்று, எதிர்கட்சி தலைவரான இபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வந்துள்ளார். அதே போல, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் […]
எதிர்க்கட்சி துணை தலைவர் யார் என்பதை பேரவையில் அறிவிப்பேன் என சபாநாயகர் அப்பாவு பதில். தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று இரண்டாவது நாளாக கூட உள்ள நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வருகை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் உதயகுமாரை நியமிக்க கோரியதை அங்கீகரிக்க வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் எடுத்த முடிவு குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பேன் என நேரில் சந்தித்த முன்னாள் […]