சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, […]
சட்டப்பேரவையில் இருந்து பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற சபாநாயகர் உத்தரவு. தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று இரண்டாவது நாளாக தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை தலைவர் தொடர்பாக அறிவிப்பேன் என தெரிவித்தும் அமளியில் ஈடுபட்டதால், இருக்கைக்கு செல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு சட்டமன்ற […]
1988, 1989 இல் நடந்தமாதிரி இன்றைய சட்டப்பேரவையில் நடக்காது. இந்தி திணிப்பு மசோதவை கண்டு பயந்து விட்டீர்கள். யாருக்காகவோ கட்டுப்பட்டு இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்க கூடாது என்ற நோக்கத்தோடு அமளியில் ஈடுபடுகிறீர்கள். – என சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டினார். தமிழக சட்டப்பேரவை நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய பேரவையை புறக்கணித்த இபிஎஸ் தரப்பினர், இன்று, எதிர்கட்சி தலைவரான இபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் வந்துள்ளார். அதே போல, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் […]
எதிர்க்கட்சி துணை தலைவர் யார் என்பதை பேரவையில் அறிவிப்பேன் என சபாநாயகர் அப்பாவு பதில். தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று இரண்டாவது நாளாக கூட உள்ள நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வருகை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் உதயகுமாரை நியமிக்க கோரியதை அங்கீகரிக்க வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் எடுத்த முடிவு குறித்து சட்டப்பேரவையில் அறிவிப்பேன் என நேரில் சந்தித்த முன்னாள் […]
நாங்கள் போராட்டம் நடத்தினால் உங்க பிழைப்பு நாறிடும் என எச்.ராஜா ட்விட். 2-வது நாள் சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடவுள்ள நிலையில், இந்த கூட்டத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் இன்று சட்டப்பேரவையில்தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானமும் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தியை எதிர்த்து நாளை சட்டமன்றத்தில் தீர்மானம். வேளச்சேரி […]
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவு உடன் சந்திப்பு. தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், எலிசபெத் ராணி, உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கும், மறைந்த உறுப்பினர்களுக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையின் முதல் நாள் நிகழ்வில் நேற்று இபிஎஸ் தலைமையிலான அதிமுக புறக்கணித்த நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமர்ந்தார். இதன்பின், […]
தமிழ் மொழியை வளர்க்க ஹிந்தியை எதிர்த்தால் மட்டும் போதுமா? என கேள்வி எழுப்பி அண்ணாமலை அறிக்கை. மக்களைத் திசை திருப்பாமல் தமிழ் மொழியை வளர்க்க போதிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘நீதிக்கட்சி, தீராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று தமிழகத்தில் பல்வேறு காலகட்டத்தில் ஹிந்தி எதிர்க்கப்பட்டு தமிழ் காக்கப்பட்டதாக கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டது திமுக. ஆனால் உண்மை என்ன என்று இனியாவது மக்கள் […]
அதிமுக என்ற கட்சியை ஒற்றுமைப்படுத்த எப்போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் என சசிகலா பேச்சு. அதிமுக 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராமவரம் தோட்டத்த்தில், எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மாறியதய் செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், அதிமுகவை ஒன்றிணைக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்படும் எப்போது மேற்கொள்ளப்படும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சசிகலா, அதிமுக என்ற கட்சியை ஒற்றுமைப்படுத்த எப்போது என்ன […]
1953 ஆம் ஆண்டு முதல் பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். எம்ஜிஆர் படம் நிறுவனத்தின் லோகோவின் கூட திமுகவின் கொடி இருக்கும். இதனால், அண்ணாவுக்கு, எம்.ஜி.ஆர் மீது பற்று அதிகம். – வி.கே.சசிகலா பேசினார். நேற்று அதிமுக கட்சி தொடங்கி 50 ஆண்டு நிறைவு செய்து, 51ஆம் ஆண்டில் நுழைந்ததை விழாவாக அதிமுகவினர் கொண்டாடினர். நேற்று காலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் கொண்டாடினர். அடுத்து, சென்னை தி நகர், […]
இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தல். இலங்கையில் அதிகளவில் சீன இராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சூழ்ச்சிகளுக்குத் துணைபோகும் இலங்கைக்குப் பதிலடி தரும் விதமாக, அந்நாட்டுடனான அரசியல் மற்றும் வர்த்தக உறவை உடனடியாகத் துண்டித்து, இலங்கை குறித்தான வெளியுறவுக் […]
பெட்ரோல் 1லிட்டர், ரூ.102.73க்கும்,டீசல் 1லிட்டர் ரூ.94.33க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயிக்கின்றனர். இந்த நிலையில், 148 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை நேற்று சற்று அதிகரித்த நிலையில், இன்று விலையில் எந்த மாற்றமுமின்றி, பெட்ரோல் 1லிட்டர், ரூ.102.73க்கும்,டீசல் 1லிட்டர் ரூ.94.33க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், அணைகள் நிரம்பி வருகிறது. இதனால், அணையை சுற்றியுள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை, தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்வதால், வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றில் இறங்க, குளிக்க, புகைப்படங்கள் எடுக்க முயற்சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய யூடியூப் சேனல்களை உருவாக்கி திமுகவின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் என ஈபிஎஸ் பேச்சு. அதிமுகவின் பொன்விழா ஆண்டு நிறைவையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று, ‘ட்விட்டர் ஸ்பேஸஸ்’ ல் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், புதிய யூடியூப் சேனல்களை உருவாக்கி திமுகவின் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்; எதிர்தரப்புடன் விவாதம் செய்யும் போது கண்ணியத்துடன் வார்த்தையை பயன்படுத்த வேண்டும். திமுகவின் மக்கள் விரோத செயல்களை இணையத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு துல்லியமாக எடுத்துரைக்க வேண்டும்; அதே நேரத்தில் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த நிலையில், மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர் 19ம் தேதி வரை சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் இன்று சட்டப்பேரவையில்தாக்கல் செய்யப்படும் என்றும், […]
அருள்மிகு சோமேஸ்வரர் FPO புது சாதனை ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் அருள்மிகு சோமேஸ்வரர் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் இடைத்தரகர்கள் இன்றி 14 டன் ஜாதிக்காயை ரூ.76 லட்சத்திற்கு நேரடியாக விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக இந்நிறுவனத்தின் இயக்குநரும், விவசாயியுமான திரு. இரஞ்சித் அவர்கள் கூறுகையில், “ஜாதிக்காய் விவசாயிகளான நாங்கள் இதுவரை 4 அல்லது 5 இடைத்தரகர்களுக்கு எங்களுடைய விளைப்பொருட்களை விற்று வந்தோம். அவர்கள் அனைவரும் எவ்வித பேரமும் பேசாமல் ஒரே விலை […]
ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வரையில் தீக்காயங்களுக்கு சிகிச்சைக்கான மருந்துகள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். – தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் அக்டோபர் 24ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகமாக கொண்டப்பட உள்ளது. இதற்கான புத்தாடை விற்பனை , பட்டாசு விற்பனை என படு ஜோராக மக்கள் தயாராகி வருகின்றனர் . அதற்கேற்றாற் போல, அரசும் பாதுகாப்பான தீபாவளிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]
தீபாவளி பண்டிகையை சிறப்பாக பாதுகாப்பாக கொண்டாட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது தமிழக அரசு. தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட பட உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் தீபாவளி பண்டிகையோட்டிக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க […]
சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு. அமைச்சர் சேகர் பாபு சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை திறந்து வைத்தார். இந்த நிலையில், 47-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 25ம் தேதி வரை விற்பனை நடைபெறும் என்றும், 21-ம் தேதி வரை பட்டாசுகளுக்கு 25% தள்ளுபடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி கரையோர பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவை சேர்ந்த 36 வீரர்கள் நாமக்கல் வருகை. தமிழகத்தில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சில மாவட்டங்களில் தற்போதே மழை பெய்து வருகிறது. மலையின் காரணமாக அணைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில், காவிரி கரையோர பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவை சேர்ந்த 36 வீரர்கள் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ளனர். கரையோர மக்களின் உதவிக்கு 04286 – 280007 […]
இலங்கை CAA சட்டத்தின் கீழ் இல்லை என்றாலும், தீவில் உள்ள இந்து தமிழர்கள் இன கலவரத்தில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், அந்த CAA சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை. மத்திய அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமைச்சட்டம் (CAA)-இன் படி, இஸ்லாமியர் அல்லத சிறுபான்மையினர் பாக்கிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து டிசம்பர் 2014க்குள் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. அந்த சட்டத்தின் […]