இலங்கை CAA சட்டத்தின் கீழ் இல்லை என்றாலும், தீவில் உள்ள இந்து தமிழர்கள் இன கலவரத்தில் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், அந்த CAA சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமையைப் பெற முடியும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை. மத்திய அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமைச்சட்டம் (CAA)-இன் படி, இஸ்லாமியர் அல்லத சிறுபான்மையினர் பாக்கிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து டிசம்பர் 2014க்குள் இந்தியாவில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது. அந்த சட்டத்தின் […]
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில்,அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறுகையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; மேட்டூரில் இருந்து 1.05 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூரிலிருந்து வரும் நீரில் பவானி, அமராவதி,நொய்யல் ஆறுகளின் நீரும் சேருவதால் முக்கொம்புக்கு 2.17 […]
ஒரு வார காலத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ பெரியசாமி அறிவிப்பு. சென்னை ராயபுரத்தில் கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ பெரியசாமி, தமிழக முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே, 2750 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் கடனைத் தள்ளுபடி செய்து பல லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுத்தார். நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டது போல் இன்னும் ஒரு […]
தமிழகத்தில் இன்று 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இல்லை சின்னம் முடங்குவதற்கு காரணமாக இருந்தவர் ஓபிஎஸ். அவர் அதிமுக வரலாற்றிற்கு ஓர் கரும்புள்ளி என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிமுக கட்சி தொடங்கி, நேற்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதிமுக இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர், […]
எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் பல நூறாண்டுகள் மக்களுக்காக இயங்கும் என ஓபிஎஸ் ட்வீட். இன்று அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியேற்றி வெள்ளை புறாக்களை பறக்க விட்டார். இந்த நிலையில், ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அஇஅதிமுக இயக்கத்தின் 51-ஆம் ஆண்டு விழாவான இன்று, கழகத் தொண்டர்கள் அனைவரும், இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் வகுத்து தந்த கொள்கைகளையும் சட்ட திட்டங்களையும் அடி […]
அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு பெற்றதை எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கொண்டாடிய ஓபிஎஸ், விழாவில் வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார். அதிமுக கட்சி தொடங்கி, நேற்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு என கொண்டாடி வருகின்றனர். அதிமுக இடைக்கால பொது செயலாளர் இபிஎஸ் தலைமையிலான அணியினர், அதிமுக தலைமை செயலகத்தில் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர். அதே போல, […]
கொலைசெய்யப்பட்ட மாணவி சத்யாவின் தயார் ராமலட்சுமி மற்றும் ரயில் ஓட்டுனரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யாவை, ரயில் முன் தள்ளிவிட்டு சதீஷ் என்கிற இளைஞன் கொலை செய்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. ஒருதலை காதல் விவகாரத்தில், மோதல் முற்றி இவருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் தான் இந்த கொலை நடந்துள்ளது என தகவல் வெளியாகி வருகின்றன. இதில் கொலையாளி சதீஷை உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கைது செய்தனர். […]
பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படாதது வருத்தமளிக்கிறது என ராமதாஸ் ட்வீட். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டாக்.ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் […]
நாங்கள் இந்தியை திணிக்கவில்லை என தமிழிசை பேட்டி. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் தமிழிசை கலந்து சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர் நாங்கள் இந்தியை திணிக்கவில்லை பாராளுமன்றத்தை பொறுத்த அளவில் ஒரு சிலர் மட்டுமே மட்டுமே செய்துள்ளனர். உங்களுக்கு எவ்வளவு தாய் மொழி பற்று இருக்கிறதோ அதே அளவு தாய் மொழி பற்று எங்களுக்கும் உள்ளது. எங்களுக்கும் உள்ளது. இதை நியாயப்படுத்தி பேசினால், உடனே என்னை இந்தி இசை என்று சொல்வதை ஒத்துக்கொள்ள மாட்டேன் […]
இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது பற்றி ஜெ.ஜெ என்ற கட்சியின் நிறுவனர் ஜோசப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி. இந்துக்களை அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யகோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் தி.க. தலைவர் கீ.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில் ஆ.ராசா பேசினார். இந்து மதம் குறித்து ஆ.ராசா பேசியது பற்றி ஜெ.ஜெ என்ற கட்சியின் நிறுவனர் […]
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி போனசாக, 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கான பணம் அவரவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி இன்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு தீபாவளி போனஸை அறிவித்துள்ளார். அதன்படி, தீபவளையை முன்னிட்டு, ரேஷன் ஆட்டைதாரகளுக்கு ரொக்க பணம் வங்கியில் செலுத்தப்பட உள்ளது. பாப்ஸ்கோ சார்பில் தட்டாஞ்சாவடி பகுதியில் சிறப்பு அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. அதனை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து, முதல் […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் நாளை சட்டப்பேரவையில் வைக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த நிலையில், மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர் 19ம் தேதி வரை சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி […]
அதிமுக 51வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அக்டோபர் 17, 1972இல் தொடங்கிய அதிமுக கட்சி தற்போது 50 ஆண்டை நிறைவு செய்து 51வது ஆண்டில் அடியெடுத்துள்ளது. இதனை அதிமுக சார்பில் கொண்டாடி வருகின்றனர். அதன் படி, அதிமுக தலைமை செயலகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா […]
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது, எலிசபெத் ராணி, உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், அஞ்சலை பொன்னுசாமி, சிபிஎம் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கும், முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம், கோவை தங்கம், ஹக்கீம், அமீது இப்ராகிம், வீரப்பன், ராஜா, பச்சையப்பன், புருஷோத்தமன், ஜனார்த்தனன், திருவேங்கடம் உள்ளிட்டோருக்கும் சட்டப்பேரவையில் […]
சட்ட பேரவைக்கு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளோம் என ஓபிஎஸ் பேட்டி. இன்று காலை 10 மணியளவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை தொடங்கியது. முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 61 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்தனர். ஓபிஎஸ் தரப்பில் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், சட்ட பேரவைக்கு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளோம். சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை […]
2024 நாடுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே, பாஜக தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் பாஜக திட்டம் பலிக்காது என திருமானவளவன் சென்னையில் பேசினார். சென்னை அரும்பாக்கம் பகுதியில் கடந்த 2 நாட்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இறகு பந்து போட்டி தொடர் நடைபெற்றது. இதில் இறுதி போட்டியை விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். இறுதி போட்டி முடிந்து வெற்றியாளர்களுக்கு கோப்பையை வழங்கினார் திருமாவளவன். அதன் பிறகு மேடையில் பேசிய […]
மீண்டும் நாளை காலை 10 மணிக்கு பேரவை கூடும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. இன்று காலை 10 மணியளவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை தொடங்கியது. முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 61 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்தனர். ஓபிஎஸ் தரப்பில் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தனர். இந்த நிலையில், எலிசபெத் ராணி, அஞ்சலை பொன்னுசாமி, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட பிரபலங்களின் மறைவுக்கும் மௌன அஞ்சலி […]
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரான முதல் நாளில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டப்பேரவை தொடங்கியது. முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 61 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்துள்ளனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை மாற்ற கோரி சபாநாயகரிடம், இபிஎஸ் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதுகுறித்து, இன்னும் சபாநாயகர் முடிவு எடுக்காத நிலையில் இபிஎஸ் […]