தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள்.! முதல் நாள் அலுவல் நிறைவு.! நாளை ஒத்திவைப்பு.!

மீண்டும் நாளை காலை 10 மணிக்கு பேரவை கூடும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.  இன்று காலை 10 மணியளவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை தொடங்கியது. முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 61 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்தனர். ஓபிஎஸ் தரப்பில் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தனர். இந்த நிலையில், எலிசபெத் ராணி, அஞ்சலை பொன்னுசாமி, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட பிரபலங்களின் மறைவுக்கும் மௌன அஞ்சலி […]

#Appavu 2 Min Read
Default Image

#Gold: தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது.!

சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, […]

GoldRateChennai 2 Min Read
Default Image

#Breaking : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் நாள்.! இபிஎஸ் தரப்பினர் புறக்கணிப்பு.!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரான முதல் நாளில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டப்பேரவை தொடங்கியது. முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 61 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்துள்ளனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை மாற்ற கோரி சபாநாயகரிடம், இபிஎஸ் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதுகுறித்து, இன்னும் சபாநாயகர் முடிவு எடுக்காத நிலையில் இபிஎஸ் […]

- 3 Min Read
Default Image

148 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!

சென்னையில் இன்று (அக்-17), பெட்ரோல் விலை 10 காசுகளும், டீசல் விலை 9 காசுகளும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அதிரடியாகக் குறைத்ததன் விளைவாக பெட்ரோல் […]

PetrolDieselPrica 3 Min Read
Default Image

#BREAKING: மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! மதுரை மாணவன் முதலிடம்!

தமிழகத்தில் மருத்துவப்படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் சுப்பிரமணியன் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். 848 தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் போக மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான 7,377 இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்காக 2,695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. […]

#MBBS 4 Min Read
Default Image

இன்னும் சற்று நேரத்தில் கூடுகிறது சட்டப்பேரவை – ஈபிஎஸ் அருகே ஓபிஎஸ் இருக்கை..!

சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கான இருக்கைகளில் மாற்றமில்லை. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்னும் சற்று நேர்தத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், ஓபிஎஸ் தரப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்றும், ஈபிஎஸ் தரப்பில் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில் அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க […]

#ADMK 3 Min Read
Default Image

அதிமுக 51வது ஆண்டு தொடக்க விழா..! கொடியேற்றி வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார் ஓபிஎஸ்..!

ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் ஓபிஎஸ் அதிமுக கொடியேற்றினார். இன்று அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியேற்றினார். அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்த நிலையில், ஓபிஎஸ் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி, வெள்ளை புறாக்களை பறக்க விட்டுள்ளார். 

#ADMK 2 Min Read

Petrol-Diesel Price:சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று (அக்-16), 148 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அதிரடியாகக் குறைத்ததன் விளைவாக பெட்ரோல் விலை கிட்டத்தட்ட […]

PetrolDieselPrice 3 Min Read
Default Image

இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்..!

இன்று மாலை 6 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும்.  வரும் 17ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 6 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 17ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எம்.எல்.ஏக்கள் […]

- 2 Min Read
Default Image

திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்.! 50 பேர் கைது.!

கோவை விமான நிலையம் அருகே திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி பாஜக மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.    திமுக எம்.பி ஆ.ராசா சில வாரங்களுக்கு முன்னர் மனுஸ்மிருதி பற்றி தனது கருத்துக்களை ஒரு விழாவில் பேசியிருந்தார். இந்த கருத்துக்கு பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. திமுக எம்பி ஆ.ராசாவுக்கு எதிராக சில ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில் நீலகிரி எம்பி ஆ.ராசா, இன்று கோவை விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். ஆ.ராசாவை […]

- 3 Min Read
Default Image

தமிழ்நாட்டு இளைஞர் படை தன் திறமையால் தரணியை ஆளட்டும்! – முதல்வர் ட்வீட்

அனைவருக்கும் உயர்கல்வி – தகுதிக்கேற்ற வேலை என்பதே நம் இலக்கு என முதல்வர் ட்வீட்.  சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ் மண்ணில் பிறந்து, தன் அறிவாற்றலால் இந்தியக் குடியரசின் தலைவராக உயர்ந்த அப்துல் […]

#DMK 3 Min Read
Default Image

ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருடர்கள் கைவரிசை..!

ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருடர்கள் டிவியை திருடி  சென்றுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் ஓபிஎஸ்-ன் பண்ணை வீடு ஒன்று உள்ளது. ஓபிஎஸ் இந்த வீட்டில் அவ்வப்போது தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது, ஓய்வெடுப்பது என வழக்கமாக இருந்தது. இந்த நிலையில், பண்ணை வீட்டின் பின்புறம் மதில் சுவரைத் தாண்டி வந்த திருடர்கள் ஓபிஎஸ் ஓய்வெடுக்கும் மேல் தளத்தில் உள்ள மதில் சுவரை தாண்டி வந்த திருடர்கள், உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து […]

#OPS 2 Min Read
Default Image

மாதா, பிதா, கூகுள், தெய்வம்.! மாணவர்ளின் குரு கூகுள் தான்.! அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.!

மாதா, பிதா, கூகுள் , தெய்வம் என கொள்கை மாறிவிட்டது. கூகுள் தற்போது மாணவர்களின் குருவாக மாறிவிட்டது. என அமைச்சர் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவில் திருமங்கலக்குடியில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டார். அந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், ‘ இன்று நடைபெறும் இந்தி எதிர்ப்பு […]

- 3 Min Read
Default Image

தமிழகத்தில் ஐபிஎஸ் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. தமிழ்நாட்டில் ஐபிஎஸ் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சைபர் கிரைம் பிரிவு எஸ்.பியாக மாதவன், கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக அசோக் குமார், கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக மதிவாணன், மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்பியாக புக்யா சினேகா பிரியா, […]

#IPS 4 Min Read
Default Image

இந்தி திணிப்பு பொய்.! ஆதாரம் இருக்கிறதா.? முதல்வர் விளக்கம் தர வேண்டும்.! – அண்ணாமலை பதில்.!

திமுகவின் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தோல்வி. மத்திய அரசு எங்கும் இந்தியை கட்டாய மொழியாக மாற்றவில்லை. அதற்கான ஆதாரத்தை முதல்வர் ஸ்டாலின் தான் அளிக்க வேண்டும். புதிய கல்வி கொள்கை என்பது மும்மொழி கல்வி கொள்கையே – பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.  இன்று திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில்  இந்தி எதிர்ப்பு மற்றும் பொதுவான நுழைவு தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். […]

#Annamalai 3 Min Read
Default Image

காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – விஜயகாந்த்

ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் பிள்ளைகள் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என விஜயகாந்த் அறிக்கை.  பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யபிரியா என்ற கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளி இளைஞர் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கல்லூரி மாணவி சத்யபிரியாவை ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்த இளைஞர் சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனையான […]

Captain Vijayakanth 4 Min Read
Default Image

#BREAKING: நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 17ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் […]

#AIADMK 3 Min Read
Default Image

ரயில் முன் தள்ளி மாணவி கொல்லப்பட்ட வழக்கு – விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி!

ரயில் முன் தள்ளி மாணவி சத்யா கொல்லப்பட்ட வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி. சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா ஆகிய இருவரும் நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த சதீஷ், எதிரில் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். ரயிலில் சிக்கி மாணவி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த […]

#TNPolice 4 Min Read
Default Image

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் -கே.பி.முனுசாமி

தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்வது ஆரோக்கியமானது அல்ல என கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.  கடந்த 11-ஆம் தேதி, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து  22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய உணவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், 22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு […]

#ADMK 3 Min Read
Default Image

வாடகைத் தாய் விவகாரம்.! நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது வழக்கறிகஞர் புகார்.!

நயன்தாரா விக்னேஷ் சிவன் தவறான முன் உதாரணமாக இருக்கின்றனர். செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.  நட்சத்திர தம்பதிகளாக நடிகை நயன்தரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 4 மாதங்களில் சரியாக அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். […]

- 5 Min Read
Default Image