ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நன்மை அளிக்கக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என முதலமைச்சர் உரை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை தொடக்க நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், வேலைவாய்ப்பு முகாம்கள் எனக்கு மனநிறைவை அளிக்கின்றன. 234 […]
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு தகவல்களை கூறுகின்றனர். என்னை பொறுத்தவரையில் இந்த வருடமும் சென்னை மக்கள் படகு வாங்கி வைத்து கொள்ளவேண்டும் என நினைக்கிறன். – என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். அப்போது பேசுகையில், பட்டினி குறியீட்டில் இந்தியா 107வது இடம் பிடித்தது பற்றி கேட்கப்பட்டது. அது பற்றி கூறுகையில், அந்த […]
கிராமங்களுக்கு எது சிறந்தது என்பது அந்தந்த கிராம மக்களுக்கு தெரியும் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை கருத்து. தேனி லட்சுமிபுரத்தில் உக்கடை வாய்க்காலில் இருந்து கைலாசநாதர் சாலையின் குறுக்கே பாலம் கட்ட உத்தரவிட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், எந்த ஒரு திடமாக இருந்தாலும் அந்த பகுதி மக்களை இணைக்கவில்லை என்றால் அது வெற்றி அடையாது. தாங்களே சிறந்த அறிவுஞானம் கொண்டவர்கள் என […]
தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கும், இளைஞர்களுக்கும் ரோல் மாடலாக இருப்பவர் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் சி.வி.கணேசன் புகழாரம். சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏக்களுக்கும், இளைஞர்களுக்கும் ரோல் மாடலாக இருப்பவர் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்; ஒவ்வொருவரும் கல்வியில், வேலை வாய்ப்பில், பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என திமுக அரசு […]
சென்னையை அடுத்த பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்ட பிறகு 13 கிராம மக்களின் போராட்டம் தற்காலிமாக வாபஸ் பெறப்பட்டது. சென்னையில் மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையத்தை அடுத்து, இரண்டாவதாக சென்னை அருகே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் கிராமத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய , மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன. இதற்கான திட்ட வரைவுகளும் தயார் ஆனது. ஆனால் இதனை எதிர்த்து, […]
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல். தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு விரைந்து சரிசெய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ நோயாளிகளை உரிய நேரத்தில் பராமரித்து மருத்துவம் அளிக்கவும், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் […]
கேரளாவில் நரபலி மூலம் கொல்லப்பட்ட தருமபுரி பெண்ணின் உடலை கொண்டுவர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள். கேரளா மாநிலத்தில் நரபலி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வ செழிப்பாக வாழ வேண்டும், கடன் பிரச்சனை தீர வேண்டும், நீண்ட ஆயுள் வேண்டும் என தமிழக பெண் உள்பட 2 பெண்களை நரபலி கொடுத்து துண்டு துண்டாக வெட்டி சாப்பிட்ட கொடூர சம்பவம் அரங்கேறியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தர்மபுரியை சேர்ந்த பத்மா என்ற […]
கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனஸில் கை வைப்பது எந்த வகையில் நியாயமாகும்? என டிடிவி தினகரன் ட்வீட். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 10 சதவீதம் […]
உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை கீழே உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட். உலக பட்டினி குறியீடு (Global Hunger Index) தொடர்பான 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 107வது இடத்தில் உள்ளது. உலக பட்டினிக் குறியீடு பட்டியலை ஆண்டு தோறும் அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் வெளியிட்டு வருகின்றன. சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு, […]
வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதி வழங்க வேண்டும் என மநீம வலியுறுத்தல். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்களை அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக அனுமதிக்க தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,’ வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று, பயிற்சி மருத்துவராகும் வாய்ப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் பரிதவிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் […]
2010 தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, 2024 தேர்தலிலும் விரட்டுவோம் என இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் உதயநிதி பேச்சு. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்தி திணிப்பு மற்றும் ஒரே மாதிரியான நுழைவு தேர்வு ஆகியவற்றை எதிர்த்து, அதனை திரும்ப பெற வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தி […]
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படை கைது செய்துள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை கடலோர காவல் படை கைது செய்துள்ளது. அவர்களிடம் இருந்து, விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் தூத்துக்குடி கொண்டு செல்லப்படுகின்றன.
‘வல்லரசு இந்தியா’ கனவு நிறைவேற ஒற்றுமையாய் உழைத்திடுவோம் என உறுதியேற்போம் என ஓபிஎஸ் ட்வீட். இன்று ஏபிஜே அப்துல்கலாமின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது பிறப்பு, ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்ற தன்னுடைய பொன்மொழிக்கு தானே எடுத்துக்காட்டாக விளங்கி, வளமான இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர். வாழ்வில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞர்களும் சரியான வழிகாட்டியாக விளங்கியவருமான, பல்துறை வித்தகர், பாரத ரத்னா திரு.ஏ.பி.ஜெ.அப்துல் […]
உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கடிதம். தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6,718 பேர் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமை கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயர்கல்வியைத் தொடரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. iஇதன் காரணமாக மாணவர்கள் உயர்கல்வி தொடங்குவதற்கு ஏதுவாக வரும் 20-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை […]
சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தி திணிப்பு மற்றும் ஒரே மாதிரியான நுழைவு தேர்வு ஆகியவற்றை எதிர்த்து, அதனை திரும்ப பெற வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது . சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக இளைஞரணி முக்கிய நிர்வாகியும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநித்திஷ் ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
இரண்டு வருடத்தில் பாஜகவினர் அண்ணாமலையை விரட்டி விடுவார்கள் என சீமான் பேச்சு. மதுரை பழங்காநத்தம் பகுதியில் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் நாடு முன்னேறுகிறது என்று மோடி பேசும் மொழியை விட திமுகவினர் பேசும் சமூக நீதி என்பது பெரிய பொய், ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று கூறும் அண்ணாமலை பிரதமர் […]
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் தொடர்ந்து வரும் நிலையில், கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் வலைகளையும் பறித்து சென்றுள்ளனர். தாக்கப்பட்ட காரைக்கால் மேடு கிராம மீனவர்கள் ஏழு பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மயிலாடுதுறை […]
சென்னையில் இன்று (அக்-15), 147 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அதிரடியாகக் குறைத்ததன் விளைவாக பெட்ரோல் விலை கிட்டத்தட்ட […]
தன் கடைசி மூச்சு உள்ளவரை இந்துத்துவாவை எதிர்த்தவர் அம்பேத்கர். அவர்களால் அம்பேத்கரை கொண்டாட முடியாது. என பேசியிருப்பார் விசிக தலைவர் திருமாவளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது, அம்பேத்கர் பற்றியும், இந்துத்துவப்பற்றியும் பேசினார். அவர் பேசுகையில், ஒரே நேரத்தில் 10 லட்சம் பேரை பௌத்தராக மாற்றிய பெருமை கொண்டவர் அம்பேத்கர் இல்லை. 10 லட்சம் இந்துக்களை பௌத்தர்களாக மாற்றிய பெருமை கொண்டவர் அம்பேத்கர். […]