தமிழ்நாடு

22% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் – மத்திய குழுவினர் இன்று தமிழகம் வருகை

22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு இன்று தமிழகம் வருகிறது. கடந்த 11-ஆம் தேதி, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து  22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய உணவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், 22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு […]

#Tamilnadugovt 2 Min Read
Default Image

இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்…!

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, திமுக சார்பில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்.  இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, திமுக சார்பில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் […]

#DMK 2 Min Read
Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று  வருகிறது. அக்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த  கூட்டத்தில், சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ள விவகாரங்கள் தொடர்பாக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட உள்ளது. கடந்த மாதம் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், மீண்டும் இன்று அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் சூதாட்ட […]

#MKStalin 3 Min Read
Default Image

இவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் – வி.கே.சசிகலா

தலைவர்களின் திருவுருவ சிலைகள் சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது என வி.கே.சசிகலா ட்வீட்.  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில்  புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு வி.கே.சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மருதத்தூர் கிராமத்தில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்தியிருப்பது வெட்கக்கேடான செயல், இது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் சமீப காலமாக, தலைவர்களின் திருவுருவ சிலைகள் சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. […]

அதிமுக 3 Min Read
Default Image

தமிழ் தான் திராவிடத்தை ஆளவும் வைக்கிறது, தமிழர்களை வாழவும் வைக்கிறது – அமைச்சர்

திராவி மாடல் ஆட்சி தமிழகத்தை ஆண்டு கொண்டியிருப்பதற்கான காரணம் தமிழ் தான் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாரம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் இன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு இந்த சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அவர், திராவிட ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தை திராவிட ஆட்சி, திராவி மாடல் ஆட்சி, […]

#DravidianModel 2 Min Read
Default Image

அரியர் மாணவர்கள் கவனத்திற்கு… சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய அறிவிப்பு.!

சென்னை பல்கலைக்கழகத்தில் அரியர் வைத்துள்ள பழைய மாணவர்கள் மீண்டும் செமஸ்டர் தேர்வு எழுத அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  சென்னை பல்கலைக்கழகம் தற்போது வெகு வருடங்களாக அரியர் வைத்துள்ள பழைய மாணவர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,  கடந்த 2015 – 2016 கல்வியாண்டிற்கு முந்தைய இளங்கலை மாணவர்களும், 2019-2020 கல்வியாண்டிற்கு முந்தைய முதுகலை பயின்றமாணவர்களும் வரும் நவம்பர் மற்றும் மார்ச் மாதம் செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது . இதற்கான முழு அறிவிப்பும், விண்ணப்பிக்க தேவையான வழிகாட்டு […]

- 2 Min Read
Default Image

#BREAKING: மாணவி கொலை – இளைஞருக்கு அக்.28 வரை நீதிமன்ற காவல்!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சதீஷுக்கு அக்.28 வரை காவல். சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ், அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவியிடம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவி சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்ட சதிஷ், அங்கிருந்து தப்பி ஓடினார். ரயிலில் சிக்கிய சத்யா, உடல் நசுங்கி உயிரிழந்தார். கல்லூரி மாணவி […]

#Chennai 3 Min Read
Default Image

மதுரை ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது.!

மதுரையில் ஆ.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய அபுதாகீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பதியப்பட்டுள்ளது.  நாடுமுழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ சோதனை நடத்தி, பலர் கைது செய்யப்பட்டனர், இந்த சம்பவத்தை அடுத்து அடுத்ததாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. கடந்த மாதம் 24ஆம் தேதி மதுரை, அனுபநாடியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் சமபந்தபட்ட குற்றவாளியை […]

- 2 Min Read
Default Image

ஓசூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.! திடீரென பரவிய வாயு குறித்து தீவிர விசாரணை.!

ஓசூரில் அரசு பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியாகி நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியில் பயின்று வரும்  மாணவர்கள் இன்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காமராஜ் காலனி பகுதியில் அரசு நடுநிலை பள்ளி இயங்கி வருகிறது. அப்போது அருகில் […]

- 3 Min Read
Default Image

இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்…!

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, திமுக சார்பில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்.  இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, திமுக சார்பில், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் […]

ஆர்ப்பாட்டம் 2 Min Read
Default Image

22% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் – மத்திய குழுவினர் நாளை தமிழகம் வருகை

22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு நாளை தமிழகம் வருகிறது. கடந்த 11-ஆம் தேதி, தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதத்திலிருந்து  22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரி மத்திய உணவுத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், 22% ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய ஒன்றிய அரசின் குழு […]

#Tamilnadugovt 2 Min Read
Default Image

தயவு செய்து சதீஷை உடனே ரயிலில் தள்ளி தண்டிக்கும் படி கேட்டு கொள்கிறேன்.! – விஜய் ஆண்டனி ஆதங்கம்.!

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற கல்லூரி மாணவியை நேற்று சென்னை பரங்கிமலை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார். மாணவியின் தந்தை மாணிக்கம் மகள் இறந்த துக்கத்தில் இருந்த நிலையில், அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவரும் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.  மேலும் சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு […]

PARANGIMALAI 4 Min Read
Default Image

ஊடகம் நமெக்கெல்லாம் ஊன்றுகோல் – அண்ணாமலை அறிக்கை

மாற்றுக் கட்சியின், மதிப்புக்குரிய சில ஊடகங்கள், நமக்கு எதிராக சாகசங்கள் செய்தாலும், அதை நம் சாதுரியத்தால்தான் வெற்றி கொள்ள வேண்டும் என அன்னமலை அறிக்கை.  நேற்று கமலாலயத்தில், சகோதரி ஒருவர் மயக்கமுற்று சரிந்த போது, அதை ஊடகத்தினர் ஒளிப்பதிவு செய்ய முயன்றபோது, ஊடகத்தினருக்கும், பாஜகவினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஊடகம் நமக்கெல்லாம் ஊன்றுகோல் போல, பல சமயங்களில் தாயின் வாஞ்சையோடு வாழ்த்திடவும். தந்தையின் கரிசனத்தோடு கண்டிக்கவும். குருவின் ஆசியோடு சொல்லிக் கொடுக்கவும், ஊடகத்தைத் […]

#Annamalai 5 Min Read
Default Image

மோடி, அமித்ஷாவை போல ராஜீவ் காந்தி கூறியதில்லை.! காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி.!

காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இந்தி மொழி திணிப்பை ஆதரித்தது கிடையாது. என காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.  நேற்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களின் சந்திப்பில் பேசுகையில், ‘ ஹிந்தி மொழியை கட்டாயம் என பாஜக அரசு கூற வில்லை. அப்படி கூறினால், தமிழக பாஜகவே எதிர்க்கும். காங்கிரஸ் ஆட்சியில் தான் ஹிந்தி கட்டாயம் ஆக்கப்பட்டது. ‘ என காங்கிரசை குற்றம் சாட்டி இருந்தார்.   இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக […]

#Annamalai 3 Min Read
Default Image

#BREAKING: தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு போனஸை அறிவித்தது தமிழக அரசு.  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #BREAKING : தமிழக அரசு […]

#DiwaliBonus 2 Min Read
Default Image

சென்னை தலைமைச் செயலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி…!

சென்னை தலைமைச் செயலகத்தில் விமலா என்ற பெண் தீக்குளிக்க முயற்சி.  சென்னை தலைமைச் செயலகத்தில் தனது பூர்வீக சொத்து மீட்டு தர கோரி 48 வயது மதிக்கத்தக்க கும்பகோணத்தை சேர்ந்த விமலா என்ற பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.  இதனை பார்த்த காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் அவரை மீட்டு தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். முதலமைச்சரின் தனிப்பிரிவில் இது தொடர்பாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தீக்குளிக்க முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

- 2 Min Read
Default Image

சாதி சான்றிதழ் சிக்கல்களை ஆராய தனி ஆணையம் வேண்டும்.! திருமாவளவன் அறிக்கை.!

சாதி சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க தனி ஆணையம் அமைக்க வேண்டும். இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குடும்பத்தாருக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அறிக்கை மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.   காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவ கூலித் தொழிலாளி வேல்முருகன் தனது 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து […]

- 9 Min Read
Default Image

அரசியல் கோமாளி எடப்பாடி பழனிசாமி – புகழேந்தி

சேலம் எடப்பாடி பழனிசாமி கோட்டை என்பது தற்போது ஓட்டையாக உள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சனம்.  அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்னை தொடர்ந்து வரும் நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரும் தனித்தனியாக செயல்பட்டு வருவதோடு, மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்ல பழனிசாமி-க்கு தகுதி இல்லை. ஓபிஎஸ் க்கு மட்டும் தான் தகுதி உள்ளது. தென்தமிழகத்திற்கு செல்ல […]

#ADMK 2 Min Read
Default Image

12 தமிழக மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் காவிரி கரையோரம் இருக்கும் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.   காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணை அதன் கொள்ளளவை எட்டியுள்ளது. நீர் வரத்து அதிகமாகியுள்ள காரணத்தால் அணையில் இருந்து நீர் திறந்துவிட படுகிறது. மேலும், காவிரி துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகிய ஆறுகளின் நீர்பிடிக்குகளிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேலும் மேட்டூர் […]

#Flood warning 3 Min Read
Default Image

இந்த தேர்வுக்கான தேர்வு மையங்கள் குறைப்பு – டிஎன்பிஎஸ்சி

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை உதவி இயக்குநர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு, தேர்வு மையங்கள் குறைப்பு.  நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை உதவி இயக்குநர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு, தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 15/2022, நாள் 18.07.2022-60 சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர் […]

examhall 3 Min Read
Default Image