சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை உதவி இயக்குநர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு, தேர்வு மையங்கள் குறைப்பு. நவம்பர் 5-ம் தேதி நடைபெறும் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை உதவி இயக்குநர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு, தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 15/2022, நாள் 18.07.2022-60 சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் அடங்கிய உதவி இயக்குநர் […]
ராஜராஜன் கோவில்கள் கட்டியது போல முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக கோவில்களை புனரமைத்து அனைவரும் வழிபட ஏற்பாடு செய்து வருகிறார் என தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் லியோனி பேசினார். தூத்துக்குடியில் திமுக ஆட்சியின் சாதனை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது . இதில் சமூகநலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி எம்.எல்.ஏவுமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் , ‘ ராஜராஜசோழன் மன்னம் எப்படி […]
தமிழகத்தில் இன்று முதல் 18-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கெழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர். அரியலூர், திருச்சி, […]
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் என்னை ஏமாற்றிவிட்டார்.நான் அவரை பார்த்துவிட்டு தான் செல்வேன் என நடிகை சாந்தினி கூறி ராமநாதபுரம் காவல் நிலையத்தில் இருக்கிறார். முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி புகார் அளித்து இருந்தார் . அதில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒன்றாக வாழ்ந்துவிட்டு இப்போது ஏமாற்றிவிட்டார் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் பெயரில் மணிகண்டன் கைது […]
தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு. மின் கட்டண உயர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் மின்கட்டண உயர்வுக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 3 மாதத்தில் சட்டத்துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக அரசு நியமனம் செய்யவில்லை என்றால் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு நீதிபதிகள் […]
கொலை செய்யப்பட்ட மனைவி சத்யாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஆணையர் சங்கர் ஜிவால். சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால், சதீஷ் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷ் […]
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய கொசுக்களின் உற்பத்தியை தடுக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை. சென்னை எழும்பூர் குடும்பநல பயிற்சி மைய வளாகத்தில் திருநங்கைகளின் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சில இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மை தான். வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இதுதொடர்பாக மருத்துவதுறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், பொதுமக்களும் டெங்கு காய்ச்சலை உண்டாக்க […]
கடந்த அதிமுக ஆட்சியில் 1000 ரூபாய் கொடுத்து வந்தோம். இவர்கள் 1500 உயர்த்தி தருவதாக கூறினார்கள். ஆனால் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. – என அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் அந்தந்த தொகுதி எம்.எல்.ஏக்கள் வைக்கும் கோரிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மதுரையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அதிமுக எம்.எல்.ஏக்களான […]
உள்துறை அமைச்சரின் அறிவிப்பு தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், அனைத்து ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இந்தியே பயிற்றுமொழியென்றும், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளின் வினாத்தாள்களும் இந்தியிலேயே இருக்கும் […]
குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதால், நீட் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு. நீட் வழக்கின் விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம். நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் ரிட் மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. கடந்த மாதம் 27ம் தேதி இந்த ரிட் மனு விசாரணைக்கு உகந்தது என உச்ச நீதிமன்றம் மனுவை ஏற்றது. இந்த நிலையில், இன்று விசாரணையின்போது, நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா […]
கிராமப்பகுதிகளில் அவசர ஊர்தி வந்து சேரும் சராசரி நேரத்தை 10 நிமிடமாக குறைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் 108 அவசர ஊர்திகள், அழைக்கப்பட்ட நேரத்திலிருந்து நோயாளிகளை சென்றடையும் சராசரி நேரம் 7 நிமிடமாக குறைந்துள்ளது. அதாவது, ஒருவர் சேவை கோரி அழைத்தவுடன் புறப்படும் அவசர ஊர்தி சராசரியாக அடுத்த 7 நிமிடங்களில் நோயாளியை சென்றடைகிறது. இது பாராட்டத்தக்கது. நோயாளிகள், விபத்துகளில் சிக்கியவர்களின் […]
மாணவி சத்யாவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால், சதீஷ் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, சத்யாவை ரயில் முன் தள்ளி […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமதின்றதில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெற இருந்தது . ஆனால் சங்கத்தேர்தல் நடைபெற கூடாது என வழக்கு தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கில் தேர்தல் நடத்த தடை விதித்து அப்போது தீர்ப்பு வெளியாகியது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. ஏற்கனவே, நடைமுறையில் உள்ள […]
ஒரு பீகாரிய பார்ப்பனன் என்னைய பார்த்து மலையாளி என்று கூறுவதா? என சீமான் பேச்சு. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம், சீமான் மலையாளி என கூறியது தொடர்பாக கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ஒரு பீகாரிய பார்ப்பனன் என்னைய பார்த்து மலையாளி என்று கூறுவதா? இவரை இங்க நடமாட விட்டது நாங்க செய்த தப்பு. ராஜாவிடம் சொல்லி வைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாமல் பேசி சிக்கலை இழுக்காதீங்க […]
வரும் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம். இன்று மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. அக்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். இன்று மாலை கூடும் அமைச்சரவை கூட்டத்தில், சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ள விவகாரங்கள் தொடர்பாக […]
கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால், சதீஷ் மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். குமரி கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இன்று தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர் […]
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, […]
சென்னையில் இன்று (அக்-14), 146 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கொண்டு, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அதிரடியாகக் குறைத்ததன் விளைவாக பெட்ரோல் விலை கிட்டத்தட்ட […]
ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷ் கைது. சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மாணவி சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்ட சதிஷ், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சதீஷ் தள்ளிவிட்டதால் ரயிலில் சிக்கிய […]