மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலை குழு தலைவர் கனிமொழி  எம்.பி ஆய்வு.!

Published by
மணிகண்டன்

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு இருந்த கனிமொழி எம்.பி தலைமையில் உள்ள நிலை குழு உறுப்பினர்களில் 11 எம்.பி.க்கள் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆய்வு செய்தனர்.

பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலை குழு மூலம் இந்தியாவில் உள்ள கிராமங்கள் ஆய்வு செய்யப்பட்டு , அதனை மேம்படுத்த தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ராஜ்யசபா எம்பியாக கனிமொழி பொறுப்பில் இருந்த சமயத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவெங்கடேசபுரம் எனும் கிராமத்தை தத்தெடுத்து அங்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து சிறப்பாக பணியாற்றி இருந்தார்.

இதன் காரணமாகவே மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலை குழுவின் தலைவராக திமுக எம்பி கனிமொழி மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் மக்களவை உறுப்பினர்கள் 21 எம்பிகளும், மாநிலங்களவையில் இருந்து 10 எம்பிகளும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பஞ்சாயத்து ராஜ் நாடாளுமன்ற நிலை குழுவில் இருந்து தான் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 11 எம்பிக்கள் ஆய்வு செய்தனர். ஆய்வு முடிந்த பிறகு பெண் எம்.பி.க்களுக்கு திமுக எம்பி கனிமொழி வளையல் வாங்கி கொடுத்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago