ரூ.15,000 கடனுக்காக 13 வயது மகளை திருமணம் செய்து வைத்த பெற்றோர்.!

Published by
murugan
  • திண்டுக்கல் மாவட்டம் கவுண்டனுரை சார்ந்த மூக்கன் தம்பதியிடம் ,குளித்தலையை சார்ந்த ஒரு தம்பதி ரூ.15,000 கடன் வாங்கி உள்ளனர்.
  • வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியாததால் தங்களது 13 வயது சிறுமையை மூக்கன் மகன் சரவணகுமாருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இந்த தம்பதி வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாங்கிய பணத்திற்காக தங்களது 13 வயது மகளை சரவணகுமாருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கவுண்டனுரை சார்ந்தவர் மூக்கன், இவரது மனைவி அஞ்சலம் இவர்களுக்கு சரவணகுமார் (23) என்ற மகன் உள்ளார்.இவர்களிடம் குளித்தலையை சார்ந்த ஒரு தம்பதி ரூ.15,000 கடன் வாங்கி உள்ளனர்.

இந்த தம்பதி வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் வாங்கிய பணத்திற்காக தங்களது 13 வயது மகளை சரவணகுமாருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து உள்ளனர்.

இதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி 13 வயது சிறுமையை ,சரவணகுமாருக்கு கட்டாயமாக கோவிலில் வைத்து திருமணம் செய்து உள்ளனர்.கடந்த 5 மாதங்களாக சரவணா குமார் சிறுமியுடன் குடும்பம் நடத்தி உள்ளார்.இந்நிலையில் இந்த திருமணத்தில் சற்று கூட விருப்பம் இல்லாத அந்த சிறுமி குழந்தைகள் நல உதவி மையத்திற்கு தகவல் கொடுத்து உள்ளார்.

பின்னர் போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதை தொடர்ந்து போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் சரவண குமாரையும் ,குழந்தைகள் திருமண தடுப்பு பிரிவுகளின் கீழ் சரவணகுமார் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோரையும் கைது செய்து உள்ளனர்.சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

 

Published by
murugan

Recent Posts

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரானில் நடந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…

2 hours ago

போர் எப்போது.? ”நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது” – டிரம்ப் சூசக பதில்.!

அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…

2 hours ago

தமிழகம் முழுவதும் ஜூலை 9ம் தேதி டாஸ்மாக் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் பணியாளர் சங்கம்.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…

3 hours ago

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

4 hours ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

5 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

5 hours ago