மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வரும் 28-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்நடைபெறவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தங்களது கட்சியின் நிர்வாகிகளுடன் வரும் 28-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கமல்ஹாசன் தலைமையில் “2024 பாராளுமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்” என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி 100 நாள் நடைபயணம் மேற்கொண்ட போது கமல்ஹாசன் அவருக்கு ஆதரவு தெரிவித்து நடைபயணத்தில் பங்கேற்றார்.
எனவே, வரும் 28-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…