நாடாளுமன்ற தேர்தல்…நிர்வாகிகளுடன் ‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை!!

Published by
பால முருகன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வரும் 28-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்நடைபெறவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தங்களது கட்சியின் நிர்வாகிகளுடன் வரும் 28-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 

கமல்ஹாசன் தலைமையில்  “2024 பாராளுமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்” என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள்  கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி 100  நாள் நடைபயணம் மேற்கொண்ட போது கமல்ஹாசன் அவருக்கு ஆதரவு தெரிவித்து நடைபயணத்தில் பங்கேற்றார்.

எனவே, வரும் 28-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

5 minutes ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

21 minutes ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

1 hour ago

11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…

2 hours ago

5-வது டெஸ்ட் போட்டி.., டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…

2 hours ago

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது குறித்து ஓபிஎஸ் ஓபன் டாக்.!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னை அடையாறு…

3 hours ago