சமூக வலைத்தளம் மூலம் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொடைக்கானலில் ஒன்று சேர்ந்து இரவு நேர பார்ட்டியில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது காவல்துறைக்கு ரகசிய தகவல் மூலம் அவர்களை வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்று கொடைக்கானல் இங்கு தமிழகம் மட்டுமல்ல வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என பல்வேறு இடங்களில் இருந்து வந்து செல்வார்கள். இந்த வகையில் சமூக வலைத்தளம் மூலம் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொடைக்கானல் மேல்மலை கிராமம் கூக்கால் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் போதையுடன் கூடிய இரவு நேர பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக தென் மண்டல காவல் தலைவர் சண்முகராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையறிந்த காவல்துறை 3 துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஏராளமான போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பார்ட்டியில் ஈடுபட்டிருந்த 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதை பொருட்களான போதை காளான், கஞ்சா மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதை பொருட்களை வாங்கி வந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை தடுப்பு காவலில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…