நரேந்திர மோடி: நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற (பிரதமர் மோடி) உங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திய வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்த முதல் தலைவர் நீங்கள் தான். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று, நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக ஆட்சி அமைத்தீர்கள். மக்களவைத் தேர்தலில் உங்களுக்கு வெற்றியைக் கொடுத்ததன் மூலம் நாட்டு மக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளில் இந்தியப் பிரதமராக நீங்கள் செய்த பணி, உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அதன் மீது நீங்கள் வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்குவீர்கள். பொருளாதாரம், சமூக நீதி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என அனைத்து மக்களும் நம்புகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றி, நல்லாட்சி வழங்க, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…