விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு.
தமிழகத்தில் நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.3,000 லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் சட்டப்பேரவையில் அறிவித்தார். பேரவையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர், மண்ணை மலடாக்கும் அபாயகரமான எந்த திட்டத்தையும் முதலமைச்சர் அனுமதிக்கமாட்டார். பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், நெகிழி இல்லாத பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் நெகிழி இல்லா வளாகங்களை ஊக்குவிக்க ரூ.54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறினார். கடற்கரைக்கு நீலக்கொடி சான்று பெறுவதற்காக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நீலக்கொடி சான்று பெறுவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…