வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலில் மாற்றத்தை உருவாக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அவர்கள் கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களுக்கான வாக்குகளை சேகரிப்பதற்காக தற்பொழுது பிரச்சாரத்தை துவங்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், முதல்கட்டமாக மதுரையில் பிரச்சாரத்தை துவங்கிய மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் அவர்கள், அதன் பிறப்பதாக விமானம் மூலம் சேலம் சென்றடைந்தார். அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் முன்பதாக பேசிய கமலஹாசன் அவர்கள் திரண்டு இருக்கும் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை உருவாக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதை உங்களது முகமும் ஆசியும் மீண்டும் மீண்டும் எனக்கு கூறுகிறது. இங்கு கூடியிருக்க கூடிய தொண்டர்கள் அனைவரும் ஆளுக்கு 100 நபர்களை சந்தித்து கூறினாலே போதும். நாளை நமதே, நம் கதை தொடங்கும், அவர்கள் கதை முடியும் என கூறியுள்ளார். மேலும் இனிவரும் 10 ஆண்டுகள் தமிழகத்துக்கு புத்துணர்வு தரும் ஆண்டாக இருக்கும் எனவும், மக்கள் நீதி மையம் நேர்மையான திட்டங்களை வகுத்து பொது மக்களின் வாழ்க்கை மேம்பட பாடுபடும் எனவும் ஊர் கூடி தேர் இழுத்தால் நாளை நமதே, நிச்சயம் நமதே என அவர் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…