ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கிய 2-வது நாளாக இன்றும் நடைபெற்று இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கை வந்து உள்ளது.இதுவரை 24 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்து உள்ள நிலையில் மீதம் உள்ள 3 மாவட்டங்களுக்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அதில் , ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.ஆளும் கட்சி அராஜகம் அதிகார துஷ்பிரயோகத்தை மீறி திமுக உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று உள்ளது.
ஆளுங்கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமைச்சர்கள் மாவட்டங்களில் முகாமிட்டு பணத்தை வாரியிறைத்தும் அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தி இருந்தால் திமுக இன்னும் பெரிய வெற்றி பெற்றிருக்கும். தமிழக வாக்காளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…