தமிழகத்தில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதி கொடுக்கப்பட்டதால் பின் வரும் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, உணவகங்களில் கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் இருக்க வேண்டும். எல்லா வாடிக்கையாளர்களும் உடல் வெப்ப பரிசோதனை செய்துபின் தான் உள்ளே அனுமதிக்க வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களை அனுமத்திக்க கூடாது.
அனைத்து மேஜைகளிலும் சானிடைசர் இருக்க வேண்டும், கழிவறைகளை தினமும் 5 முறை சுத்தம் செய்ய வேண்டும். கையை கிருமி நாசினி கொண்டு கழுவிய பின்தான் உள்ளே அனுமதிக்க வேண்டும். ஏசி ரூம்களை இயக்க கூடாது.
50% இருக்கைகள் மட்டுமே அனுமதி. டேபிள்களுக்கிடையில் சமூக இடைவெளி விட்டு இருக்க வேண்டும். ஊழியர்கள் மாஸ்க் அணிய வேண்டும். ஊழியர்கள் கைக்கடிகாரம், நகைகளை அணியக்கூடாது. இன்று முதல் டீ கடைகளில் 50% இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…