வருகிற 25-ஆம் தேதி திருமணம் நடத்துவதற்கு முன் பதிவு செய்திருப்பவர்கள் வழக்கம்போல் திருமணங்களை கோவில்களில் நடத்தலாம்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தற்போது புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி முதல் அனைத்து நாட்களும் இரவு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுப முகூர்த்த நாள் என்பதால் திருமணங்கள் நடக்க இருக்கின்றன. இந்த நாட்களில் கோவில்களில் திருமணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், வருகிற 25-ஆம் தேதி திருமணம் நடத்துவதற்கு முன் பதிவு செய்திருப்பவர்கள் வழக்கம்போல் திருமணங்களை கோவில்களில் நடத்தலாம் என்றும், ஆனால் திருமணத்தில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கொரோனா தடுப்பு விதிமுறைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவில் சார்பில் கை கழுவி கிருமிநாசினி வழங்கப்படும். உடல் வெப்பம் கண்டறியப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், திருமணத்துக்கு வருபவர்களும் திருமண அழைப்பிதழையும் கையில் கொண்டு வருவது நல்லது என்றும், அரசு பிறப்பித்துள்ள நடைமுறை விதிகளை பின்பற்றி திருமணங்களை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…