தமிழகத்தில் ஷாப்பிங் மால்கள், ஷோரூம்கள் திறக்க அனுமதி.!

பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி.
தமிழகத்தில் பல்வேறு தினங்களில் நடந்த ஆய்வு அடிப்படையிலும், மாவட்ட ஆட்சியருடன் நடத்தப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ குழுவினர் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனை அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் தற்போது உள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஷாப்பிங் மால், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகளில் 100 பணியாளர்களுடன், மத்திய அரசின் குளிர்சாதன வசதி குறித்த நடைமுறைகளை பின்பற்றியும், நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேலும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க தடை தொடரும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025