{Image source : Twitter/@UpdatesChennai}
பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்க கோரி துரை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் மனு.
மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், கடல் வளத்தை பாதுகாக்கவும், கடல் அரிப்பை தடுக்கும் வகையில் மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில், கடலுக்கு நடுவே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய சுற்று சூழல் வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதில், மீனவர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது எனவும் குறிப்பிட்டிருந்தது.
மேலும், மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அரசு அனுமதி கேட்டுள்ளது. அவர்களும் அனுமதி அளித்து விட்டால், அடுத்ததாக கட்டுமான பணிகள் தூங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்சநீதிமன்றமத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், பேனா சின்னத்திற்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…