முருகனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்க கோரி மனு..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள முருகனின் மாமியார் பரோல் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். தனது மகள் நளினி தற்போது பரோலில் உள்ளதால் மருமகன் முருகனுக்கும் பரோல் வழங்க வேண்டும். முருகனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க ஏதுவாக பரோல் வழங்க வேண்டும் என நளினியின் தாய் பத்மா வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே ராஜீவ் கொலை வழக்கின் கீழமை நீதிமன்ற விசாரணையில் பங்கேற்றுள்ளதால் இந்த மனுவை விசாரிப்பது முறையாக இருக்காது எனத் தெரிவித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் மனுவை வேறு அமர்வுக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025