மான நஷ்ட ஈடாக ரூ.100 கோடி கேட்ட டோனியின் வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி …!

Published by
Rebekal

மான நஷ்ட ஈடாக ரூ.100 கோடி கேட்ட டோனியின் வழக்கை நிராகரிக்க கோரிய ஐபிஎஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கான ஐபிஎல் சூதாட்டம் குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் அவர்கள் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

இந்த விவாத நிகழ்ச்சியில் தன்னை குறிப்பிட்டு தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி கிரிக்கெட் வீரர் டோனி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஜீ தொலைக்காட்சி, அதன் ஆசிரியர் மற்றும் போலீஸ் அதிகாரி சம்பத் குமார் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் டோனி தரப்பில் கொடுக்கப்பட்ட மனுவில் பல தகவல்கள் மறைந்து உள்ளதாகவும், கிரிக்கெட்டில் நடைபெறும் சூதாட்டத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவே விவாத நிகழ்ச்சியை நடத்தியதாகவும், ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் விதமாக டோனி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தொலைக்காட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அது போல டோனியின் இழப்பீடு கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாரும் மனு தாக்கல்  செய்துள்ளார். தற்பொழுதும் சென்னை உயர்நீதிமன்றம் மான நஷ்ட ஈடாக 100 கோடி கேட்ட டோனியின் வழக்கை நிராகரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக டோனி தொடர்ந்த வழக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

3 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

3 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

4 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

5 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

6 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

6 hours ago