சசிகலாவிற்கு “Z PLUS” பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய அரசுக்கு மனு.!

Published by
பாலா கலியமூர்த்தி

சசிகலாவிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கறிஞர் வாசுகி ராஜராஜன் மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார்.

சசிகலாவிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி மத்திய உள்துறை செயலாளருக்கு வழக்கறிஞர் வாசுகி ராஜராஜன் மத்திய அரசுக்கு மனு அளித்துள்ளார். இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த ஜனவரி 20ஆம் தேதி சிகிச்சைக்காக பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 98% லிருந்து 97% ஆக குறைந்துள்ளது. தாமாக உணவு உட்கொள்கிறார், உதவியுடன் நடக்கிறார். சசிகலாவுக்கு கொரோனா தொற்றுக்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது என மருவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

சிறையில் அடைக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா ஜனவரி 26-ஆம் தேதி நாளை சிறையில் இருந்து விடுதலையாவது உறுதி ஆனது. சிறை கட்டுப்பாட்டிலிருந்து சசிகலாவை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருவதாகவும், அதற்கான அனைத்து பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

50 minutes ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

2 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

2 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

4 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

5 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

6 hours ago