பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்ட கிசான் திட்டத்தில் பல்வேறு முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க, தொலைபேசி, பேக்ஸ், வாட்ஸ் அப் மற்றும் இமெயில் முகவரியை தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
தொலைபேசி : 044 2851 3500
பேக்ஸ் : 044 2851 2510
வாட்ஸ் அப் : 94981 81035
இமெயில் : cbcid2020@gmail.com
பிரதான் மந்திரி கிசான் யோஜனா என்னும் நிதி உதவி திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு, மூன்று முறை வீதம் ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தமிழகத்திலும் விவசாயிகள் பயனடைந்து வரும் நிலையில், பல்வேறு முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் விவசாயிகள் என்ற பெயரில் முறைகேடாக பணம்பெற்று வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணம் திரும்ப பெற்று வருகிறது. இந்நிலையில் கிசான் திட்ட முறைகேடு குறித்து புகார் அளிக்க, தொலைபேசி, வாட்ஸ்அப் எண்களை தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் அளித்துள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…