உயிரை பறித்த விஷ சாராயம் – முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் முதல்வர் ஆலோசனை…!

MK Stalin

முதல்வர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போது வரையில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ள சாராயம் அருந்திய 34 பேர்  சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார்.

மேலும், சிகிச்சையில் உள்ளவர்களுக்கு  உயர் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில், அமைச்சர்கள் பொன்முடி, வேலு, செஞ்சி மஸ்தான், டிஜிபி சைலேந்திரபாபு, விழுப்புரம் ஆட்சியர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர். செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், ஆட்சியர்கள் எஸ்.பி.க்கள் ஆகியோருடனும் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads