குடியரசு தலைவரின் காவல் விருது..தமிழக காவல் அதிகாரிகள் 24 பேர் தேர்வு!முறுக்கும் காக்கிசட்டைகள் ஜோர்

Published by
kavitha
  • இன்று நாடு முழுவதும் 71 வது குடியரசு தினம் கொண்டாட்டம்
  • தமிழகத்தை சேர்ந்த 24 காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாட்டின் 71வது  குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக காவல் துறையின் 24 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருதுகளை அறிவித்துள்ளார். இந்த விருதுகள் தென்னிந்திய அளவில் தனி சிறப்புடன் பணியாற்றக்கூடிய காவல்துறை  அலுவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்விருது ஆனது காவல் துறை அதிகாரிகளின் செயல்பாடு மற்றும் அவர்களின் சாதனைகள் மற்றும் நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நடப்பாண்டின் இந்திய குடியரசு தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகளை  தமிழக காவல் துறையை சேர்ந்த 3 காவல் அதிகரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

அதன் விவரம்:

  • கூடுதல் காவல் துறை இயக்குநர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு -அபய்குமார் சிங் , சென்னை)
  • கூடுதல் காவல்துறை இயக்குநர், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு-லேஷ்குமார் யாதவ்
  • காவல் கண்காணிப்பாளர்-II, திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு-பெ.ல்கு.பெத்துவிஜயன்

ஆகியோர் இந்த விருதினை பெறுகின்றனர்.

21 காவல் அதிகரிகளுக்கு இந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான காவல் விருதுகள் அறிவிப்பு விபரம்:

  • சேலம் மாநகர காவல் ஆணையாளர்– க.செந்தில்குமார்
  • சென்னை காவல் கண்காணிப்பாளர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு-சி.ராஜேஸ்வரி
  • காவல் துணை ஆணையாளர், போக்குவரத்து-தெற்கு, சென்னை –  .மா. மயில்வாகனன்
  • சென்னை காவல் துணை ஆணையாளர், ஆயுதப்படை-2, புனித தோமையார் மலை -ர.ரவிசந்திரன்
  • சென்னை காவல் துணை ஆணையாளர், ஆயுதப்படை-1-கி.சவுந்திரராஜன்
  • சென்னை காவல் துணை கண்காணிப்பாளர், பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை ச.வசந்தன்
  • நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை-கோ.மதியழகன்
  • காவல் துணை கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, திருநெல்வேலி-வே.அனில்குமார்
  • காவல் உதவி ஆணையாளர், மாநகர குற்ற பிரிவு, திருப்பூர்-கா.சுந்தர்ராஜ்
  • காவல் துணை கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தலைமையிடம், சென்னை-சே.ராமதாஸ்
  • காவல் துணை கண்காணிப்பாளர், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை, கோவை உட்கோட்டம்-ந.ரவிகுமார்
  • காவல் உதவி ஆணையாளர், புனித தோமையார் மலை போக்குவரத்து அமலாக்கப்பிரிவு, சென்னை-ஷே.அன்வர் பாட்ஷா
  • காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, நாகப்பட்டினம்-க.ரமேஷ்குமார்
  • காவல் ஆய்வாளர், பாதுகாப்பு பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை-ம.நந்தகுமார்
  • காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, ஈரோடு-மு.நடராஜன்
  • காவல் ஆய்வாளர், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை, தூத்துக்குடி-ந.திருப்பதி
  • சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, சென்னை-அ.மணிவேலு
  • சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை-ந.ஜெயசந்திரன்
  • சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை, சென்னை-த.டேவிட்
  • சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை-ஜே.பி.சிவக்குமார்
  • சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஊழல் தடுப்பு, கண்காணிப்பு துறை, சிறப்பு புலனாய்வு பிரிவு, சென்னை-ஒய்.சந்திரசேகரன்

ஆகியோர் இவ்விருதினை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

2 minutes ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

37 minutes ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

1 hour ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

2 hours ago

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

2 hours ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

3 hours ago