ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்.! சென்னை புதிய கமிஷனர் அருண் அதிரடி.!

Published by
மணிகண்டன்

சென்னை: ரவுடிகளுக்கு அவர்கள் புரியும் மொழியில் நடவடிக்கை எடுப்போம். ரவுடிகளை ஒடுக்குவோம். – சென்னை மாநகர காவல் ஆணையர் அருண்.

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் இன்று முதல் பணியர்த்தப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இன்று காலை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மாநகரின் காவல் ஆணையராக பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர் சென்னை காவல் பயிற்சித்துறை டிஜிபியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் அருண் ஐபிஎஸ் சென்னை மாநகரின் 110வது காவல் ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சட்டம் ஒழுங்கை காப்பாறுவதே எனது முதல் பணி என குறிப்பிட்டார்.

மேலும் கூறிய சென்னை ஆணையர் அருண், அனைத்து காவல்த்துறை அதிகாரிகளும் அவர்கள் பொறுப்பை உணர்ந்து, அவர்களது தினசரி பணிகளை செய்தாலே குற்றங்கள் குறையும் என கூறினார். அண்மையில் உயிரிழந்த ஆம்ஸ்ட்ராங் கொலை பற்றி செய்தியாளர்கள் கேட்கையில், நான் இப்போது தான் பொறுப்பேற்றுள்ளேன். ஆம்ஸ்ட்ராங் வழக்கு பற்றி எனக்கு முழுதாக தெரியாது என கூறினார்.

அடுத்து, சென்னையில் சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும் இதுவே முதல் பணி. அடுத்து ரவுடிகளை ஒடுக்கணும். ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். அதனையும் சரி செய்ய வேண்டும். என்னை நம்பி இந்த பொறுப்பை கொடுத்துள்ள தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நல்ல பெயர் கிடைக்க செய்வேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவோம் என்று இன்றைய முதல் செய்தியாளர் சந்திப்பில் சென்னை மாநகர ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

8 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

9 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

9 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

10 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

12 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

12 hours ago