அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை காவல்துறை முடக்கியுள்ளது.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல்துறை 8 தனிப்படை அமைத்து தேடி வருகிறது.தமிழகம் மட்டுமின்றி கேரளா,கர்நாடகாவிலும் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை காவல்துறை தேடி வருகிறது.
இதனையடுத்து,பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக காவல்துறை நேற்று முன்தினம் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்புவதை தடுக்க இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருக்கும் நிலையில்,அவர் மீது மேலும் ஒரு பணமோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சாத்துரில் சத்துணவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் எஸ்.பிக்கு வந்த இந்த புகாரில் முகாந்திரம் உள்ளதா என காவல்துறை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி நிராகரிக்கப்பட்டு,பின்னர் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்த நிலையில்,உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று கேவியட் மனு தாக்கல் செய்தது.
தங்கள் தரப்பை கேட்காமல் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்தது.
இந்நிலையில்,அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகளை காவல்துறை முடக்கியுள்ளது.தலைமறைவாகி இருக்கும் ராஜேந்திர பாலாஜி பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சூழலில்,தற்போது அவரது வங்கிக் கணக்குகளை காவல்துறை முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…