தமிழகம் முழுவதும் நேற்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக கூறி 1614 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
காற்று மற்றும் ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்,மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
மேலும்,அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை காவல்துறை சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,நவம்பர் 4 ஆம் தேதியான நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.அப்போது,அரசின் விதிகளை மீறி,அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து நேற்று இரவு வரை பட்டாசு வெடித்ததாக கூறி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 1614 பேர் மீது காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக,சென்னையில் ராயப்பேட்டை,கீழ்பாக்கம்,அயனாவரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 758 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…