ஓயாத கொத்தடிமை..தமிழகத்திற்கு கடத்த முயன்ற 31 ஜர்க்கண்ட் பெண்கள்!!பின்புலத்தில் திரூப்பூர்

Published by
kavitha
ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொத்தடிமைகளாக கடத்த முயன்ற 31 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஆடை தொழிற்சாலைகளில் வட மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் வேலை செய்து வருகின்றனர். இதில் பெண்களும், சிறுமி,சிறுவர்களும் அடங்குவர்.இவர்கள் அனைவரும் இடைத்தரகர்கள் மூலமாக இங்கு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.  மேலும் இந்த இடைத்தரகர்கள் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக இங்கு விட்டு செல்வதாக போலீசாருக்கு புகார்கள் குவிந்து நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற 31 பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் பல மாவட்டங்களில் இருந்து 30க்கும் அதிகமாக  பெண்களை தமிழகத்துக்கு வேலைக்கு அழைத்துவர அம்மாநிலத்தை சேர்ந்த இடைத்தரகர் ஒருவரின் ஏற்பாட்டால் அங்கு உள்ள லதேஹர் மாவட்டத்தில் இருந்து 9 சிறுமிகள் என 31 பெண்களை பேருந்து ஒன்றில்  ஏற்றி கொண்டு  தமிழகத்தை நோக்கி புறப்பட்டார்.
வழியில் லதேஹர் மாவட்டத்தின் தாதா என்கிற கிராமத்தில் போலீசார் அவ்வழியாக வந்த அந்த பேருந்தை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட இடைத்தரகரிடம் பெண்களை வேலைக்கு அழைத்து செல்வதற்கான எந்த ஒரு ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் அந்த பெண்களுக்கு மாதம் ரூ.9 ஆயிரம் சம்பளம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக்காட்டியே தமிழகத்துக்கு கடத்த முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இடைத்தரகர், பேருந்து ஒட்டுநர் மற்றும் கிளீனர் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.கடத்த முயன்ற 31 பெண்களையும் போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். தமிழகத்திற்கு எந்த தொழிற்சாலைக்கு கொத்தடிமையாக இவர்களை கடத்த முறன்றனர் என்பது குறித்து போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by
kavitha

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago