Police Mobile [Image- TH]
காவலர்கள் பணியில் இருக்கும் போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தல்.
காவலர்கள் தாங்கள் பணியில் இருக்கும் போது, மொபைல் போன் உபயோகப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள சென்னை பெருநகர காவல் துறையின் காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர், இந்த தகவலை அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதுகாப்பு மற்றும் சாலைப்போக்குவரது பணிகளில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்துவதால் பணியை சரியாக செய்யமுடிவதில்லை, மேலும் விழிப்புணர்வுடன் இருந்து சமூகப்பணிகளை முடிக்கவேண்டியது கட்டாயமாகிறது என்பதை வலியுறுத்தி இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து காவலர்களும் இந்த அறிவிப்பை பின்பற்றி சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் எனவும், அனைத்து காவல் நிலைய தகவல் பலகையில் இந்த அறிக்கை ஒட்டப்படவேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…