நாளை மறுநாள் இந்த குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும்..!

Published by
Rebekal

ஜனவரி 31ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் 5 வயதுககுட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடத்திற்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து தமிழகம் முழுவதிலும் வழங்கப்படுகிறது. இந்த போலியோ சொட்டு மருந்து, இளம்பிள்ளை வாதம் வராமல் பாதுகாப்பதற்காக குழந்தைகளுக்கு போடப்பபடுகிறது. இந்நிலையில் ஜனவரி 17-ஆம் தேதி போடப்பட இருந்த போலியோ சொட்டு மருந்து கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை மறுநாள் தமிழகத்தில் 43 ஆயிரத்து 57 மையங்களில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் விமான நிலையங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பணிக்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டாயம் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகளை அழைத்து வரக் கூடிய பெற்றோர்கள் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி அழைத்துவர வேண்டும் எனவும், மொத்தம்70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தடுப்பதற்காகவும் தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

26 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

4 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago