நாளை மறுநாள் இந்த குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும்..!

Published by
Rebekal

ஜனவரி 31ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் 5 வயதுககுட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருடத்திற்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து தமிழகம் முழுவதிலும் வழங்கப்படுகிறது. இந்த போலியோ சொட்டு மருந்து, இளம்பிள்ளை வாதம் வராமல் பாதுகாப்பதற்காக குழந்தைகளுக்கு போடப்பபடுகிறது. இந்நிலையில் ஜனவரி 17-ஆம் தேதி போடப்பட இருந்த போலியோ சொட்டு மருந்து கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது நாளை மறுநாள் தமிழகத்தில் 43 ஆயிரத்து 57 மையங்களில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் விமான நிலையங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பணிக்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டாயம் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகளை அழைத்து வரக் கூடிய பெற்றோர்கள் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி அழைத்துவர வேண்டும் எனவும், மொத்தம்70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தடுப்பதற்காகவும் தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

4 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

5 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

6 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

7 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

8 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

9 hours ago