வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தம்..!

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கு ஊராட்சி மன்ற தலைவருக்காக, சுயேட்சையாக லெட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். ஆனால், அவருடைய பெயர் தனலட்சுமி என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட வேட்பாளர் பெயர் தவறாக இருப்பதால், வாக்குப்பதிவை நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும், தனது வெற்றி பாதிக்கப்படும் என லட்சுமி கூறியதால் உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தனலட்சுமி என்பதில் ‘தன’ என்பதை மட்டும் மையால் அழித்து திருத்தம் செய்யவும் வேட்பாளர் லட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.