காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாவூர் ஊராட்சியில் கடந்த 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
அங்கு ஊராட்சி மன்ற தலைவருக்காக, சுயேட்சையாக லெட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். ஆனால், அவருடைய பெயர் தனலட்சுமி என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட வேட்பாளர் பெயர் தவறாக இருப்பதால், வாக்குப்பதிவை நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும், தனது வெற்றி பாதிக்கப்படும் என லட்சுமி கூறியதால் உள்ளாவூர் ஊராட்சியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தனலட்சுமி என்பதில் ‘தன’ என்பதை மட்டும் மையால் அழித்து திருத்தம் செய்யவும் வேட்பாளர் லட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…