ஏப்ரல் 21-ஆம் தேதி நடக்க இருந்த சீருடைப் பணியாளர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய காலியிடப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் தேர்வை நடத்தியது. எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், உடல்கூறு அளத்தல் உடல் திறன் போட்டி ஆகியவை கடந்த மார்ச் 8-ம் தேதி நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் காவல்துறையினர் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் பங்கேற்றதால் மார்ச் 8-ம் தேதி முதல் நடைபெறவிருந்த தேர்வு ஏப்ரல் 21 முதல் நடத்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு அறிவித்து இருந்தது.
இந்நிலையில், வரும் 21-ஆம் தேதி நடைபெறவிருந்த தகுதித்தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது.
கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…
பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…
விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது…
சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும்…
டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான…
மும்பை : ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆனால், மும்பையைச்…