2 நாள் தமிழக பயணம்.! இன்று மாலை சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.!

Published by
மணிகண்டன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வர உள்ளார். இன்று மாலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வர உள்ளார்.  குடியரசு தலைவருக்கு தமிழக அரசு சார்பில் வழக்கமான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

சென்னை, கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக திரௌபதி முர்மு தமிழகம் வர உள்ளார. இன்று மாலை தமிழகம வரும் அவர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்க வைக்கப்பட உள்ளார்.

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.!

அதன் பிறகு நாளை குறிப்பிட்ட சில முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடல சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

குடியரசுத் தலைவர் வரவுள்ளதால் இன்று மாலை முதலே சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் சென்னை முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago