பாளையங்கோட்டை சிறையில் வலிப்பு நோயால் விசாரணை கைதி மரணம்.!

Published by
கெளதம்

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆய்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மகன் பாரத் முருகன் (28) இவரை ஆய்க்குடி காவல்துறையினர் அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ம் தேதி சிறையில் அடைத்தனர்.  மேலும் , கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் இவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு பாரத் முருகனிற்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது.சிறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.இதையெடுத்து மேல் சிகிச்சைக்காக காலை 11 மணியளவில் நெல்லையிலுள்ள அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அங்கு சிறிது நேரம் சிகிச்சை பெற்ற நிலையில் திடீரென உயிரிழந்தார். பாரத் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இன்று மாஜிஸ்திரேட்  விசாரணை முடிந்த பிறகு பாரத் முருகனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Published by
கெளதம்

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

14 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

44 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago