“இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கூடாது!”- தமிழக அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

Published by
Surya

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்ற தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டி ஆகியவற்றுக்கு 69 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு ரோஸ்டர் முறையில் பின்பற்றப்பட்டு வந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, கடந்த 2015- ம் ஆண்டு உத்தரவிட்டது. அதனை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது.

அதற்கு மாற்றாக கடந்த 2016- ம் ஆண்டு தமிழக அரசு, அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, மீண்டும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் சீனியாரிட்டி வழங்குவதற்கு வழிவகை செய்தது. இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் சட்டம், விதிமுறைகளுக்கு புறம்பாக பின்பற்றப்பட்ட நடைமுறை என்பதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இந்த சட்ட விதிகள் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என கடந்த ஆண்டு நவம்பரில் தீர்ப்பு வழங்கியது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை கடந்த ஜூலை மாதம் 6- ம் தேதி, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வில் காணொலி மூலம் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, தமிழக அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கோரி சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது என்ற தமிழக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Published by
Surya

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

6 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

6 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

6 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

7 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

7 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

8 hours ago