பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் தேதி குளறுபடி.! ஆசிரியர்கள் குழப்பம்.!

Published by
Dinasuvadu desk

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் மற்றும் தேர்வு முடிவுகள் தேதி குளறுபடியால்ஆசிரியர்கள் குழப்பம் .

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் 10 வகுப்பு மற்றும் +2 மாணவர்கள்  கடைசி தேர்வில் பலர் கலந்து கொள்ளவில்லை. அதுபோல் +1 மாணவர்களுக்கான கடைசி தேர்வு மட்டும் நடைபெறவில்லை. இதனால், அந்த தேர்வை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 10, 11 மற்றும்  12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கான தேதியை நேற்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். 

அதன்படி +2-ம் வகுப்புக்கு ஜூன் 4-ம் தேதியும்,  +1-ம்  வகுப்புக்கு ஜூன் 2-ம் தேதியும், அதுபோல் 10-ம் வகுப்புக்கு   ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வினாத்தாள் திருத்தும் பணிக்கான அறிவிப்பு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், வரும் 28-ம் தேதி முதல் ஜூன் 9-ம் தேதி வரை +2 விடைத்தாள் திருத்தும் பணியும், ஜூன் 11 முதல் 23-ம் தேதி வரை + 1 வினாத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.

இதுபோல், 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 16-ம் தேதி முதல் ஜூன் 23-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற வேண்டும். ஆனால், தவறாக  ஜூலை 23-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் பணி ஜூன் 24 முதல் ஜூலை 7-ம் தேதிக்கு பதிலாக ஜூலை 24-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

36 minutes ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

57 minutes ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

2 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

2 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago