மீண்டும் மதுரை-ராமேஸ்வரம் இடையே இரவு நேர ரயில் இயக்க பொதுமக்கள் கோரிக்கை..!

Published by
murugan

மதுரை-ராமேஸ்வரம் இடையே தினமும்  கடைசி ரயில் மதுரையில் இருந்து மாலை 6.15-க்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 5.45 மணிக்கும் ரயில் இயக்கப்படுகிறது. முன்பு மதுரையில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கும் , ராமேஸ்வரத்தில் இருந்து நள்ளிரவு 12.05 மணிக்கும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.
ஆனால் பொதுமக்கள் மற்றும் பல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுகொண்டு கடந்த 2013-ம் ஆண்டு முதல் மதுரையில் இருந்து மதியம் 12.15 மணிக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 12.10க்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் இரவு நேர ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.இதனால் மாலை 6 மணிக்கு பிறகு மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்ல  ரயில்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்போது தீபாவளிப் பண்டிகையை வருவதை ஒட்டி மதுரையில் உள்ள ஜவுளிபொருள்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான உபயோகப்பொருட்கள் வாங்க கூட்டம் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் செல்கின்றனர்.
மதுரையில் மாலை 6 மணிக்கு பிறகு ரயில் இல்லாததால் மறுநாள் காலை வரை பொதுமக்கள் ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நிறுத்தப்பட்ட இரவு நேர ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

41 minutes ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

3 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

6 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

7 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

9 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago