[Image source : Twitter @ikamalhaasan]
கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்குமாறு ராகுல்காந்தி, கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் .
நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னையில் மக்கள் நீதி மய்ய கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமை வகித்தார். இதில் வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் பல்வேறு விஷயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், வரும் மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்ற பொதுத்தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளதாக கூறினார்.
மேலும், நாடாளுமன்ற தேர்தல் காலம் நெருங்கி விட்டதால், நேரம் குறைவாக இருப்பதாகவும், உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் எனவும், பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட வேலைகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்பதை பற்றியும் குறிப்பிட்டு கமல்ஹாசன் பேசினார்.
இந்நிலையில், ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஈரோடு இடைத்தேர்தலில் இவிகேஎஸ்.இளங்கோவனுக்காக பிரச்சாரம் செய்தது போல, ராகுல்காந்தி அழைப்பை ஏற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் மே முதல் வாரத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…