இந்து கோவில்களை பற்றி இழிவாக பேசிய திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார் நடிகை காயத்ரி ரகுராம். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
சென்னை நுங்கப்பாக்கம் காம்தார் நகரில் உள்ள காயத்ரி ரகுராமின் வீட்டை முற்றிகையிட்டு போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக நேற்றிய தினம் காயத்ரி ரகுராம் மெரினா கடற்கரையில் என்னை நேருக்கு நேர் மிரட்ட தயாரா என டிவிட்டரில் திருமாவளவனுக்கு சவால் விடுத்திருந்தார்.
இதற்கிடையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கமிஷனரிடம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இந்நிலையில் சவால் தொடர்பாக மீண்டும் டிவிட்டரில் பதிவிட்டிருந்த காயத்ரி ரகுராம்.
அதில் இன்றைய தினம் மெரினாவில் சந்திப்பு தொடர்பாக திருமாவளவனின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறேன் இந்த நிமிடம் வரை அவரிடம் இருந்து எந்தவொரு தகவலும் வரவில்லை இதனால் விடுதலை கட்சி தொண்டர்களை ஏமாற்றும் விதமாக ஆகிவிட்டது. இதற்கு அடுத்து எந்தவொரு எம்பியும், அல்லது தலைவரோ சாதி, மதம் சார்த்த பாகுபாடுகளை பார்க்கமாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுருந்தார்.
உண்மையான தலைவர் அனைவரையும் ஒரே நேர்கோட்டில் தான் பார்ப்பார்கள் என எதிர்பாக்கிறேன். பின்னர் அனைவரும் உங்களின் வழக்கமான பணியைத் தொடருமாறு பதிவிட்டுருந்தார்.
மேலும் காயத்ரி ரகுராம் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…